பௌத்தர்களின் பார்வையில் மற்ற மதங்கள்

இந்த பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான மக்கள் இருப்பது போலவே, கோடிக்கணக்கான வெவ்வேறு மனநிலைகள் மற்றும் விருப்பங்களும் உள்ளன. பலதரப்பட்ட மக்களின் வெவ்வேறு விதமான தேவைகளுக்கு ஏற்ப மதங்களில் பரந்த தேர்வும் தேவை என்பது பௌத்தத்தின் கண்ணோட்டம். எல்லா மதங்களும் மனிதகுலத்தின் நல்வாழ்வுக்காக உழைப்பதற்கான ஒரே நோக்கத்தை பகிர்ந்து கொள்கின்றன என்பதை பௌத்தம் அங்கீகரிக்கிறது. இந்த பொதுவான அடிப்படையில், பௌத்தர்களும் கிறிஸ்தவர்களும் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் மரியாதை மனப்பான்மையில் ஒருவருக்கொருவர் கற்றலைப் பகிர்ந்துகொள்ளும் பரிமாற்ற திட்டங்களை நிறுவியுள்ளனர்.

ஏனெனில் எல்லோருக்கும் ஒரே விதமான மனநிலைகளும், விருப்பங்களும் இருக்காது என்பதால், புத்தர் பலவிதமான மக்களுக்கம் பொருந்தும் விதமான பரந்த பலவிதமான முறைகளைக் கற்பித்தார். இதனை மனதில் வைத்து, புனிதர் தலாய் லாமா உலகில் பலவிதமான வேறுபட்ட மதங்கள் இருப்பது மிகவும் அற்புதமானது என்று கூறி இருக்கிறார். ஒரே உணவு எல்லோரையும் ஈர்க்காது என்பது போல, ஒரு மதம் அல்லது நம்பிக்கைகளின் தொகுப்பு அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யாது என்பது உண்மைதான். பல்வேறு வகையான மதங்கள் இருக்கின்றன என்பது மிகவும் நன்மை பயக்கும், மேலும் வரவேற்கப்பட வேண்டிய மற்றும் மகிழ்ச்சியடைய வேண்டிய ஒன்று.

 மதநல்லிணக்க பேச்சுவார்த்தை

பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் பௌத்த குருமார்கள் மற்றும் பிற மதத் தலைவர்கள் இடையே தற்போது பேச்சுவார்த்தை வளர்ந்து வருகிறது. போப் ஜான் பால் II-ஐ தலாய் லாமா அடிக்கடி சந்தித்தார், 1986ல், அனைத்து உலக மதத் தலைவர்களையும் இத்தாலியின் அஸிஸியில் நடைபெற்ற மிகப்பெரிய பேரவையில் பங்கேற்க போப் அழைப்பு விடுத்திருந்தார். 150 பிரதிநிதிகள் அங்கு இருந்தனர், தலாய் லாமா போப்பிற்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்தார், அதோடு பேரவையில் முதல் பேச்சாளராக பேசும் கவுரவமும் அளிக்கப்பட்டது. பேரவையில், மதத்தலைவர்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவான தலைப்புகளான அன்பு, இரக்கம் மற்றும் நன்னெறிகள் குறித்து உரையாடினர்.  பல்வேறு மதத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் அளித்த ஒத்துழைப்பு, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றால் மக்கள் மிகவும் ஊக்கப்படுத்தப்பட்டனர்.

நிச்சயமாக ஒவ்வொரு மதமும் வேறுபட்டது. மெய்ப்பொருளியல் மற்றும் சமயத்தைப் பார்க்கும்போது, இந்த வேறுபாடுகளைச் சமாளிக்க உறுதியாக வழி இல்லை, ஆனால் இதன் பொருள் நாம் வாதிட வேண்டும் என்று அர்த்தமல்ல. "என் நம்பிக்கைகள் உன்னுடையதை விட சிறந்தவை" என்ற அணுகுமுறையால் எந்தப்பயனும் இல்லை. எல்லா மதங்களிலும் பொதுவாக இருப்பனவற்றைப் பார்ப்பது மிகவும் நன்மை பயக்கும்: அதாவது, அவர்கள் அனைவரும் மனிதநேயத்தின் நிலைமையை மேம்படுத்தவும், அனைவருக்கும் நன்னெறி நடத்தை, அன்பு, இரக்கம் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் பாதையை பின்பற்றவும் கற்றுக்கொடுப்பதன் மூலம் அனைவருக்கும் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற முற்சிக்கிறார்கள். மக்கள் முற்றிலுமாக பொருள் சார்ந்த வாழ்க்கையில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்று கற்பிக்கிறார்கள், ஆனால் குறைந்தபட்சம் பொருள் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தைத் தேடுவதற்கு இடையில் சில சமநிலையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

உலகின் நிலையை முன்னேற்றம் பெறச்செய்ய அனைத்து மதங்களும் ஒன்றிணைந்த செயல்பதுவதென்பது வியத்தகு உதவியாக இருக்கும். பொருள் முன்னேற்றம் முக்கியமானது, ஆனால் ஆன்மிக முன்னேற்றமும் அதைவிட முக்கியம் என்பதை தெள்ளத் தெளிவாக புரிகிறது. வாழ்க்கையில் பொருள் அம்சங்களை மட்டுமே நாம் வலியுறுத்தினால், எல்லோரையும் கொல்லக்கூடிய சந்திவாய்ந்த வெடிகுண்டை தயாரித்தல் விரும்பத்தக்க இலக்காக மாறிப்போகும். மற்றொரு புறம், மனிதாபிமானத்தோடு அல்லது ஆன்மிக வழியில் சிந்தித்தால், மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரிப்பதால் எழப்போகும் துன்பங்களை நாம் அறிவோம்.  எனினும், நாம் ஆன்மீக ரீதியில் மட்டுமே வளர்ந்துவிட்டு, பொருள் பக்கத்தை முற்றிலும் புறக்கணித்தால், எல்லோரும் பசியோடு இருப்பார்கள். அதுவும் நல்லதல்ல! எனவே, சமநிலை முக்கியமானது.

ஒருவருக்கொருவர் கற்றல்

உலக மதங்களுக்கு இடையேயான தொடர்புகளின் ஒரு அம்சம் என்னவென்றால், அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் சில சிறப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, பல கிறிஸ்தவ சிந்தனையாளர்கள் பௌத்தத்தில் இருந்து ஒருமுகப்படுத்தல் மற்றும் தியான முறைகளைக் கற்க ஆர்வம் காட்டி இருக்கின்றனர், மேலும் ஏராளமான கத்தோலிக்க பாதிரியார்கள், மடாதிபதிகள், துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் இந்தியாவின் தர்மசாலாவுக்கு வருகை தந்து இந்தத் திறன்களைக் கற்று, அவற்றை தங்களது சொந்த பாரம்பரியத்திற்கு எடுத்துச் சென்றனர்.  சில பௌத்தர்கள் கத்தோலிக்க கருத்தரங்கங்களில் கற்பித்திருக்கின்றனர், எவ்வாறு தியானம் செய்வது, ஒருமுகப்படுத்தலை எப்படி மேம்படுத்துவது மற்றும் அன்பை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பதை அவர்களுக்குக் கற்பிக்க நானே எப்போதாவது அழைக்கப்பட்டுள்ளேன்.

எல்லோரையும் நேசிக்க கிறிஸ்தவம் நமக்குக் கற்பிக்கிறது, ஆனால் உண்மையில் அதை எப்படி செய்வது என்பது பற்றிய விரிவான விளக்கங்களை கிறிஸ்தவம் அளிக்கவில்லை, அதே சமயம் பௌத்தம் அன்பை வளர்ப்பதற்கான முறைகள் நிறைந்திருக்கிறது. கிறிஸ்தவ மதம் தன்னுடைய உயர் மட்டத்தில் இருந்து பௌத்த வழிமுறைகளை கற்க திறந்த மனதுடன் இருந்தது. அதனால் அவர்கள் அனைவரும் பௌத்தர்களாக மாறுகின்றனர் என்று அர்த்தமல்ல – யாரும் யாரையும் மாற்ற இங்கு முயற்சிக்கவில்லை. அவர்கள் தங்கள் சொந்த மதத்திற்குள் தழுவிக்கொள்ளும் கருவிகளாக இந்த முறைகளைக் கற்றுக் கொண்டதால், மேலும் சிறந்த கிறிஸ்தவர்களாக இருக்க அவர்களுக்கே உதவுகிறது.

அதேபோன்று, பல பௌத்தர்கள் கிறிஸ்தவத்தில் இருந்து சமூக சேவையை கற்பதில் ஆர்வமாக இருந்தனர். பெரும்பாலான கிறிஸ்தவ பாரம்பரியம் தங்களுடைய துறவிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி, மருத்துவப்பணி, முதியோர் பராமரிப்பு, ஆதரவற்றோர் இல்ல கவனிப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. சில பௌத்த நாடுகள் ஏற்கனவே இத்தகைய சமூக சேவைகளை வளர்த்தெடுத்த போதிலும், பல்வேறு சமூக மற்றும் புவியியல் அமைப்பு காரணங்களால் எல்லோராலும் இதைச் செய்ய முடியவில்லை. பௌத்தர்கள் சமூக சேவை குறித்து ஏராளமானவற்றை கிறிஸ்தவர்களிடம் இருந்து கற்றனர், புனிதர் தலாய் லாமாவும் இதற்கு திறந்த மனதுடன் இருந்தார். ஒவ்வொரு தரப்பினரும் மற்றவர்களிடமிருந்தும் அவர்களின் சொந்த சிறப்பு அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொள்வது மிகச் சிறந்தது. இந்த வழியில், பரஸ்பர மரியாதை அடிப்படையில் உலக மதங்களிடையே ஒரு வெளிப்படையான அமைப்பு இருக்க முடியும்.

சுருக்கம்

இதுவரையில், மதங்களுக்கு இடையேயான தொடர்பு மிக உயர்ந்த மதத் தலைவர்கள் மட்டத்தில் நிகழ்ந்துள்ளது - அங்கு மக்கள் மிகவும் வெளிப்படையானவர்களாகவும், குறைவான காற்புணர்ச்சி கொண்டவர்களாகவும் தெரிகின்றனர்.  கீழ் மட்ட அளவில், மக்கள் மிகவும் பாதுகாப்பற்றவர்களாகி, ஒரு கால்பந்து அணி மனநிலையை வளர்த்துக் கொள்கிறார்கள் - இங்கு போட்டி மற்றும் சண்டை என்பதே விதிமுறை. மதங்களுக்கு இடையில் அல்லது பல்வேறு பௌத்த பாரம்பரியங்களுக்கு இடையில் இது நிகழ்ந்தாலும், இது போன்ற அணுகுமுறையை வைத்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எனவே, பௌத்த மதத்திற்குள்ளும் உலக மதங்களிடையேயும் அனைத்து மரபுகளையும் மதிக்க வேண்டியது அவசியம். 

Top