ஆறு பரிபூரணங்களின் மேற்பார்வை : ஆறு பரமிதங்கள்

ஆறு தொலைதூர - அடைதல் அணுகுமுறைகள் என்பது விடுதலை மற்றும் ஞானமடைதல் மன நிலைகளுக்கு வழி நடத்துபவையாகும். நம்முடைய மிகப்பெரிய மனத்தடைகளான கோபம், பேராசை, பொறாமை, சோம்பேறித்தனம் உள்ளிட்டவற்றிற்கான எதிர்ப்பு மருந்துகள் - ஆறு அணுகுமுறைகள் ஒன்றாக செயல்பட்டு, வாழ்க்கை நம்மிடம் வீசும் அனைத்தையும் கையாள்வதற்கு நம்மைத் தூண்டுகிறது. இந்த அணுகுமுறைகளை மேம்படுத்திக் கொள்வதன் மூலம், நாம் மெல்ல மெல்ல ஆனால் நிச்சயமாக நம்முடைய முழுத்திறனை உணர்ந்து நமக்குள்ளும் மற்றவர்களுக்கும் மிகப்பெரிய பலனைக் கொண்டு வருவோம்.

நம்முடைய நேர்மறை இலக்குகளை நம் வாழ்வில் நாம் அடைவதற்கு நாம் முன்னேற்றம் பெறச் செய்ய வேண்டிய ஆறு மனநிலைகளை புத்தர் சுட்டி காட்டி இருக்கிறார். அவை பெரும்பாலும் "பரிபூரணங்கள்," என்று மொழிபெயர்க்கப்படுகின்றன, புத்தர்களைப் போன்று அதனை முழுவதுமாக சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம், நாமும் கூட விடுதலை மற்றும் ஞானத்தை அடைய முடியும். நான் அதனை "தொலைதூர - அடைதல் அணுகுமுறைகள்" என்று அழைக்கவே பரிந்தரைப்பேன் இதற்கான சமஸ்கிருதப் பெயர் பரமிதா என்பதாகும், ஏனெனில் இதனை அடைவதன் மூலம் நம்முடைய பிரச்னைக் கடலில் இருந்து தூர இருக்கும் கரையை நம்மால் அடைய முடியும். 

நாம் இந்த ஆறு மனநிலைகளை வெறுமனே பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் பட்டியலாக மட்டும் பார்க்கக் கூடாது. மாறாக, அவை மனநிலைகள் நாம் அவற்றுடன் ஒன்றாக கலந்து நம்முடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்துபவையாக்க வேண்டும். லாம்-ரிம்மில் (தரப்படுத்தப்பட்ட பாதை) காணப்படும் மூன்று நிலை உந்துதல்களுக்கு ஏற்ப, அவற்றை நம் வாழ்வில் வளர்த்துக்கொள்வது இப்போது நமக்கு மகத்தான நன்மைகளைத் தருகிறது:

  • சிக்கல்களைத் தவிர்க்கவும் தீர்க்கவும் அவை நமக்கு உதவுகின்றன.
  • நம்முடைய சிக்கலான உணர்ச்சிகள் மற்றும் மனநிலைகளில் இருந்து வெளியேற அவை நமக்கு உதவுகின்றன.
  • மற்றவர்களுக்கு சிறப்பாக உதவுபவராக நம்மை அவை பலமாக்குகின்றன.

இந்த நேர்மறை அணுகுமுறைகளை மேம்படுத்த நாம் பயிற்சித்தால், நாம் மனதில் ஒன்று அல்லது இந்த இலக்குகளின் அதிகமானவற்றை மனதில் வைத்தல் வேண்டும். அவற்றை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்ற இது நமக்கு வலுவான ஊக்கத்தை அளிக்கிறது.

1. பெருந்தன்மை

பெருந்தன்மை என்பது மற்றவர்களுக்கு என்ன தேவையோ அதனை கொடுப்பதற்கு தயாராக இருத்தல். அதன் பலன்களாவது:

  • மற்றவர்களுக்கு பங்களிக்க நம்மிடம் ஏதாவது இருக்கிறது என்ற சுய-மதிப்பு உணர்வை அது நமக்குத் தருகிறது, தாழ்த்தி சுய- மதிப்பிடுவது மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க அல்லது வெளியேற அது நமக்கு உதவுகிறது.
  • தொடர்ச்சியான பிரச்சனைகளை கொண்டு வரும் மகிழ்ச்சியற்ற மன நிலைகளான இணைப்பு, கஞ்சத்தனம் மற்றும் கருமித்தனத்தை கடக்க அது உதவுகிறது.
  • தேவையில் இருக்கும் மற்றவர்களுக்கு இது உதவுகிறது. 

2. நன்னெறி சுய-ஒழுக்கம்

நன்னெறி சுய ஒழுக்கம் என்பது, அதன் தீமைகளை உணர்ந்து, அழிவுகரமான நடத்தையிலிருந்து நாம் விலகி இருப்பது. அதன் நன்மைகளாவது:

  • தீங்கு விளைவிக்கும் செயல், பேச்சு மற்றும் சிந்தனையில் இருந்த எழக்கூடிய அனைத்து பிரச்னைகளையும் தவிர்ப்பதற்கு அது நம்மைத் தூண்டுகிறது. மற்றவர்களிடத்தில் நம்பிக்கைக்கான அடிப்படையை இது உருவாக்குகிறது, உண்மையான நட்பின் அடித்தளம் அதுவேயாகும். 
  • இது நமது நிர்ப்பந்தமான எதிர்மறையான நடத்தையை முறியடிக்கவும், தன்னடக்கத்தை வளர்த்துக்கொள்ளவும், அமைதியான, நிலையான மனதிற்கும் வழிவகுக்கும்.
  • பிறரைக் காயப்படுத்துவதில் இருந்து நம்மைத் தடுக்கிறது.

3. பொறுமை

பொறுமை என்பது கோபம் அல்லது வருத்தம் இல்லாமல் சிரமங்களைத் தாங்கும் திறன். அதன் நன்மைகளாவது:

  • நாமோ மற்றவர்களோ தவறு செய்தாலோ அல்லது விஷயங்கள் தவறாக நடந்தாலோ மோசமான நிகழ்வை உருவாக்குவதை தடுப்பதற்கு நம்மை அது தூண்டுகிறது. 
  • நம்முடைய மனதின் சிக்கலான உணர்வுகளான கோபம், பொறுமையின்மை மற்றும் சகிப்புத்தன்மையின்மை உள்ளிட்டவற்றை வென்று வருவதற்கு அவை நமக்கு உதவுகின்றன. இதனால் கடினமான நேரத்தில் கூட நம்மால் அமைதியாக இருக்க முடியும்.  
  • மற்றவர்களுக்க சிறப்பாக உதவு செய்ய அது நம்மை அனுமதிக்கிறது, ஏனெனில் அவர்கள் நம்முடைற அறிவுரையை பின்பற்றாமல், தவறுகளை ஏற்படுத்துதல், செய்தல் அல்லது பகுத்தறிவற்று பேசினாலோ அல்லது நமக்கு மோசமான நேரத்தை கொடுத்தாலோ கூட நாம் அவர்களுட கோபப்பட மாட்டோம். 

4. விடாமுயற்சி 

விடாமுயற்சி என்பது வாழ்க்கை கடினமாக சென்று கொண்டிருக்கும்போது கைவிடாமல், இறுதிவரை தொடர்ந்து முயற்சியை மேற்கொள்வதற்கான தலைவனின் தைரியம். அதன் நன்மைகளாவது:

  • நாம் தொடங்கியதை சோர்வடையாமல் செய்து முடிப்பதற்கான பலத்தை இது நமக்கு அளிக்கிறது.
  • அற்ப விஷயங்களால் நம்மைத் திசைதிருப்பும் போதாமை மற்றும் தள்ளிப்போடும் சோம்பல் போன்ற உணர்வுகளை சமாளிக்க இது உதவுகிறது.
  • இது மிகவும் கடினமான பணிகளைச் செய்வதில் வெற்றியை அளிக்கிறது, மேலும் உதவ கடினமாக இருக்கிறது என்று விட்டுக்கொடுப்பதில் இருந்து நம்மைத் தடுக்கிறது.

5. மனஉறுதி (ஒருநிலைப்படுத்துதல்)

மனஉறுதி (ஒருநிலைப்படுத்துதல்) என்பது மனம் அலைபாய்தல், சோர்வு மற்றும் உணர்ச்சி ரீதியிலான வருத்தம் போன்ற மனநிலைகளில் இருந்து முழுமையாக விடுபடுதலாகும். அதன் நன்மைகளாவது:

  • நாம் எதைச் செய்கிறோமோ அதில் கவனம் செலுத்த இது உதவுகிறது, எனவே தவறுகளையும் விபத்துகளையும் தவிர்க்கலாம்.
  • இது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை சமாளிக்க உதவுகிறது, மேலும் அதிக உற்சாகம், இடைவெளி அல்லது உணர்ச்சி ரீதியாக கிளர்ந்தெழுகிறது.
  • மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் மற்றும் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்த இது நம்மை அனுமதிக்கிறது, எனவே அவர்களுக்கு எப்படி உதவுவது என்பதை சிறப்பாக பார்க்கலாம்.

6. பாகுபடுத்தும் விழிப்புணர்வு (அறிவொளி)

பாகுபடுத்தும் விழிப்புணர்வு (அறிவொளி) என்பது சரியானவற்றை வேறுபடுத்தி பொருத்தமானது மற்றும் பொருத்தமில்லாதது இடையிலான உறுதித்தன்மையுடன் எது சரி எது தவறு என்பதை வேறுபடுத்திக் காட்டும் மனநிலை ஆகும். அதன் நன்மைகளாவது:

  • எந்தவொரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் என்ன செய்ய வேண்டும் மற்றும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவாகவும் சரியாகவும் பார்க்க இது அனுமதிக்கிறது, பின்னர் நாம் வருத்தப்பட வேண்டிய ஒன்றைச் செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறது.
  • இது உறுதியற்ற தன்மையையும் குழப்பத்தையும் போக்க உதவுகிறது.
  • மற்றவர்களின் சூழ்நிலைகளைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு இது நமக்கு உதவுகிறது, எனவே என்ன சொல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் அறிவோம், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Top