சுய- போற்றுதலை வெல்வதற்கான அறிவுரை

உங்களுக்காக நீங்களே சட்டங்கள், விதிமுறைகளை வகுத்துக் கொள்கிறீர்கள். மற்றவர்கள் உங்களுடைய சட்டங்களை உடைத்தால் அவர்களை கையும் களவுமாக பிடித்து அவர்களை தண்டிக்கிறீர்கள். ஆனால் நீங்களே அதை உடைத்தால், அப்படியே கடந்து சென்று விடுகிறீர்கள். உங்களுடைய சொந்த பலவீனத்தையும், சுயத்தையும் எதிரியாகப் பார்க்காத வரை நீங்கள் எந்த உதவியையும் ஏற்க மாட்டீர்கள் என்று கெஷே ஷர்மாவா கூறி இருக்கிறார். உங்களுடைய உணர்வுகள் தான் மிகவும் முக்கியமானது, யாரும் உங்களைத் தொட முடியாது என்று நீங்கள் நினைத்தால். சுயத்துடன் ஆவேசப்படும் ஒருவருக்கு மிகத் திறம்வாய்ந்த லாமாக்களால் கூட உதவ முடியாது ஏனெனில் சுய- போற்றுதல் அணுகுமுறைகளுடன் லாமாக்களுடைய அறிவுரைகள் ஒத்துபோகாது. உங்களுடைய பாதையில் குருக்களால் நீங்கள் வழிநடத்தப்படும்போது, நீங்கள் சுய- போற்றுதல் எனும் தவறான அணுகுமுறையை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதை முதலில் கட்டாயம் உணர வேண்டும். சுய- போற்றுதலால் மோசமான விஷயங்களைச் செய்வதற்கான அனைத்து காரணங்களையும் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள், எனவே உங்களுடைய செயல்களுக்கான காரணங்களை நீங்கள் எடைபோட வேண்டும். அறிவுரைகளை ஏற்பதற்கு நீங்கள் தயாராக இல்லை என்றால் குருக்களால் மட்டுமல்ல உங்களுடைய நண்பர்களாலும் கூட உங்களுக்கு உதவி செய்ய முடியாது. 

புத்தர்கள் மட்டுமல்ல – நாம் அனைவருமே சுய-போற்றுதல் என்னும் தவறை கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் கட்டாயம் ஒப்புக் கொள்ள வேண்டும். இந்தத் தவறை நாம் முதலில் நம்மிடம் இருப்பதை உணர்ந்து அதனை அகற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். குறைந்தபட்சம் நாம் சுய-போற்றுதல் அணுகுமுறையை கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தால், அதுவே சிறந்த முன்னேற்றம். விமர்சனங்களை நீங்கள் பெற்றால், அது உங்களுடைய சொந்த சுய-போற்றுதல் காரணமாக ஏற்பட்டது என்பதை நீங்கள் எப்போதும் உணர்வீர்கள். அவ்வாறு நீங்கள் இதனை உணரவில்லையென்றால், நீங்கள் கோபமடைகிறீர்கள். உங்களுடைய காலில் ஒரு முள் குத்திவிட்டால் நீங்கள் கோபமடைந்து அதை திருப்பி அடிப்பதால் நஷ்டம் யாருக்கு? சிறு விமர்சனங்கள் மற்றும் மகிழ்ச்சியின்மையை நம்மால் இப்போது ஏற்கமுடியவில்லையென்றால், கீழான மறுபிறப்பில் எப்படி நம்மால் துன்பத்தை பொறுத்துக் கொள்ளமுடியும்?

இலக்குடன் கூடிய பொறுமையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கெஷே சென்கவா கூறி இருக்கிறார். நாம் விமர்சனங்களைப் பெற்றால், நாம் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்ற உணர்கிறோம். இலக்கு இல்லையென்றால் எந்த அம்பையும் எய்தல் முடியாது. நீங்கள் எந்தத் தவறும் செய்யாத போதும் விமர்சிக்கப்படுகிறீர்கள் என்றால், அது முன்ஜென்மத்தில் நீங்கள் மற்றவர்களுக்கு இழைத்த தீங்கால் ஏற்பட்ட விளைவு. உதாரணமாக, புத்தரின் சீடர் ஒருவர் இருந்தார், அவர் சிக்கலான உணர்வுகள் மற்றும் அணுகுமுறைகளில் இருந்து தானே வெளியேறுவதற்காக அது தொடர்புடைய மூன்று வகையான சத்தியங்களைக் கொண்டிருந்த அர்ஹதர் ஆவார். இருப்பினும், சிலர் அந்த அர்ஹதர் தன்னுடைய சத்தியங்களை உடைத்துவிட்டார் என்று அவருக்கு எதிராக போலியான சாட்சியங்களையும் கூறினர். மனம் நொந்த புத்தர் அந்த அர்ஹதர் தன்னுடைய சத்தியங்களை உடைப்பதற்கு சாத்தியமே இல்லை என்றார். மேலும், மிகவும் உணர்ந்த சீடர் ஒருவர் தன்னுடைய சபதத்தை மீறியதாகக் குற்றம் சாட்டுபவர்களை பௌத்தராகக் கருதப் போவதில்லை என்றும், அதற்குப் பதிலாக அவர்களை பௌத்தத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதுவதாகவும் புத்தர் கூறினார். அர்ஹதர் ஏன் விமர்சிக்கப்படுகிறார் என்று மற்றவர்கள் கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த புத்தர், ஏனெனில் அர்ஹதர் தன்னுடைய முன்ஜென்மத்தில், வதந்தி மற்றும் அவதூறு செய்பவராக இருந்திருக்கிறார், இவரால் ஒரு ராஜா தனது ராணியை நாடு கடத்தி இருக்கிறார். அதன் விளைவுதான் இப்போது அவருக்கு ஏற்படுகிறது என்றார். 

விமர்சித்தல், கிசுகிசுத்தல் மற்றவர்களை குற்றம்சாட்டுதல் போன்றவை மிகவும் அழிவுகரமான நடத்தை ஏனெனில், உங்களுடைய சொந்த நடைமுறைக்கு அது உதவாது என்பதோடு மட்டுமல்ல, அவ்வகையான நடத்தைகள் மற்றவர்களை புண்படுத்துவதோடு குழப்பத்திற்கும் காரணமாக அமைகிறது. ஞானம் அடைந்த இருவரால் மட்டுமே ஒருவரை ஒருவர் தீர்மானிக்க முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையை விமர்சித்தாலோ அல்லது தவறாக குற்றம்சாட்டினாலோ நாம் எதிர்மறை கர்மாவை அடைவோம். அல்லது, விந்தையான ஏதையோ செய்வதற்காக போதிசத்வத்தை விமர்சிக்கிறோம், ஆனால் அது நல்ல காரணத்திற்காகவே என்றாலும் கூட, அதன் முடிவும் எதிர்மறையானதாகவே இருக்கும். 

எல்லா நேரமும் மற்றவர்களை விமர்சிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பவர்கள் ஆழ்ந்த சுய- போற்றுதல் அணுகுமுறையை கொண்டிருப்பார்கள். சில துறவிகள் பல்வேறு போதனைகளை கேட்டிருந்தாலும் கூட, முன்ஜென்மங்களில் சுயங்களில் சுய- போற்றுதல்  அணுகுமுறைகளைக் கொண்டிருந்ததால் அவற்றை அவர்கள் நடைமுறையில் செயல்படுத்தமாட்டார்கள். நம்முடைய எதிரிகளுக்குத் தீங்கு ஏற்படுத்துவதன் விளைவும் கூட சுய-போற்றுதலே ஆகும். 

ஒருமுறையும், புத்தர் காலத்தில், ஒரு துறவி தன்னுடைய அங்கிக்கு சாயமிட்டுக் கொண்டிருந்தார், அதற்கான பணிகளை அவர் செய்து கொண்டிருந்த போது, யாரோ ஒருவருடைய குரங்கு காணாமல் போய்விட்டது. அந்தத் துறவி பானையில் இருந்து தன்னுடைய அங்கியை வெளியே எடுத்த போது அதில் குரங்கின் உடல் காணப்பட்டது. துறவி குரங்கைத் திருடி சமைத்துவிட்டார் என்று மக்கள் குற்றம்சாட்டினார்கள். துறவியை நீதிமன்றம் அழைத்து சென்று தண்டனை பெற்றுத் தந்தார்கள். சில காலத்திற்குப் பிறகு, அந்தக் குரங்கு முண்டும் தோன்றி அந்தத் துறவி குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டது. ஏன் இப்படி நடந்தது என்ற துறவி புத்தரிடம் கேட்டார், ஏனெனில் முன்ஜென்மத்தில் அந்தத் துறவி மற்றொரு துறவிவின் குரங்கைத் திருடிவிட்டார் என்று குற்றம்சுமத்தியால் இப்போது இப்படி நடந்ததாக புத்தர் கூறினார்.

மகிழ்ச்சியாகவும், சொகுசாகவும் இருப்பதில் நாம் மிகவும் கவனத்துடன் இருக்கிறோம் அதற்காக பணம் ஈட்ட கடினமாக உழைக்கிறோம், கொள்ளையர்களைப் போல நமக்கு நாமே இலக்கு வைக்கிறோம். ஒரு கதை இருக்கிறது ஒருவர் தன்னுடைய பணம் அனைத்தையும் மூட்டையாகக் கட்டி அதை அந்தரத்தில் தொங்க விட்டிருந்தார், பணத்தை இழந்துவிடுவோம் என்று பயந்து அவர் அப்படி செய்தார். ஒரு நாள், அந்தப் பண மூட்டையே அந்த நபர் தலையில் விழுந்து அவருக்கு காயம் ஏற்பட காரணமாக அமைந்தது. இந்தக் கதையின் கருவானது சுய-போற்றுதல் நம்முடைய சந்தோஷத்தை தற்காலிகமாகவும் கடைசியாகவும் தற்காக்கிறது. நம்முடைய அனைத்து முன்ஜென்மங்களிலும் நாம் சுய-போற்றுதலைக் கொண்டிருந்திருக்கிறோம், அது தான் நம்முடைய மிகப்பெரிய பிரச்னை என்று நாம் உணர்ந்தாலும் கூட நம்மால் அதில் இருந்து உடனடியாக வெளியேற முடியாது.

எனவே, நாம் எந்த விமர்சனத்திற்கும் எதிர்வினையாற்றாமல் இருக்க முயற்சிக்க வேண்டும், அதற்குப் பதிலாக மற்றவர்களின் தவறு மற்றும் உங்கள் சொந்த மனப்பான்மை இரண்டையும் நீங்கள் உணர வேண்டும். சுய-போற்றுதல் மனப்பான்மையை போதுமான அளவு உணர்ந்துகொள்வது பொறுமையை வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும். ‘நெருப்பு சுடும்’ என்று சொல்வது இயற்கை. அதில் விந்தையான விஷயம் ஒன்றுமில்லை. அதே போன்ற ஒரு நபர் மோசமாக இருக்கிறார் அவரின் விமர்சனம் உங்களுடைய சுய-போற்றுதல் அணுகுமுறைகளிலும் வேரூன்றி இருக்கிறது என்பதை உங்களால் உணர முடிகிறது – அதுவும் கூட இயற்கையான விஷயமே. அது போன்ற புரிதல் கோபத்தையோ பைத்தியக்காரத்தனத்தையோ ஏற்படுத்தாது ஏனெனில் எதிர்தரப்பு நபர் முற்றிலும் தவறானவர் அல்லது மோசமானவர் என்று நிரூபிப்பதற்கான எந்தத் தேவையும் இல்லை. சுய-போற்றுதல் தன்னையும் மற்றவர்களையும் அழிக்கிறது, ஒழுக்கத்தை அழிக்கிறது என்று A Filigree for the Mahayana Sutras சொல்கிறது. சுய-போற்றுதல் செயல்களாக நாம் எதைச் செய்தாலும் அவை கீழ்நிலை, அல்லது நரகத்திற்கு வழிநடத்திச் செல்கிறது. புத்தர்களும் போதிசத்துவர்களும் சுய-போற்றுதலை வெறுக்கிறார்கள், அதிக விரும்பத்தகாத தன்மைகள் எழுவதற்கான காரணிகள் அவையே, மேலும் ஒருவர் சுதந்திரம் இல்லாமல் கீழ்நிலை மறுபிறப்பை எடுக்கிறார்.

சுய- போற்றுதல் நம்முடைய அனைத்து முந்தைய முயற்சிகளையும் வீணாக்கி நம்முடைய முன்னேற்றத்தில் பின்தள்ளுகிறது. வாழ்வின் நறுமணத்தை கெடுக்க நம்மிடம் இருக்கும் விஷம் அது என்பதை உணர வேண்டும். எப்போதும் இந்த சுய-போற்றுதல் அணுகுமுறையை அழிப்பதற்கான முயற்சியை செய்யுங்கள். நம்முடைய பயிற்சி எதுவாக இருந்தாலும், சுய-போற்றுதலை அகற்றுவதற்கானதாக இருத்தல் நலம். கடம்பா கெஷே ஒருவர் கூறி இருக்கிறார் அவர் எப்போதெல்லாம் புத்தகம் படிக்கிறாரோ அதில் இருக்கும் அனைத்து தீய குணங்களும் தனக்கானது என்றும் அனைத்து நல்ல விஷயங்களும் பிறரைச் சார்ந்தது என்றும் கருதி தன்னுடைய சுய-போற்றுதலை இப்படியாக எதிர்ப்பதாக தெரிவித்திருக்கிறார். ஒருவரது சுய-போற்றுதலை குறைக்காமல் போதிச்சிட்டாவின் குணத்தைப் பெற முடியாது. போதிசிட்டா மற்றும் கருணையுடன், சுய போற்றுதலின் எதிர்ப்பு வலுவடைகிறது, மேலும் இரக்கம் நமக்குள் ஆசைகளை நிறைவேற்றும் மரத்தை நிறுவுகிறது. நீங்கள் இரக்கத்தைக் கடைப்பிடித்தால், இரக்கத்தின் நேர்மறையான விளைவுகள், சுயபோற்றுதலின் எதிர்மறை விளைவுகளை விட அதிகமாக இருக்கும்.

“பென்போவின் சில பகுதிகளில், கெஷே கம்லுங்பாவைவிட அதிக மகிழ்ச்சியானவர் யாரும் இல்லை, மற்றொரு இடத்தில் கெஷே செங்காவாவிற்கும் இது சரியாகப் பொருந்துவதாக கெஷே பொடோவா கூறி இருக்கிறார். இதற்குக் காரணம் அவர்கள் சுய- போற்றுதலை உள்ளிருந்து வெளியேற்றி இருக்கிறார்கள்”. கெஷே செங்காவா மிகவும் ஏழை அவர் எப்பதாவது தான் சாப்பிடுவார், தைக்கப்பட்ட லெதர் பாவாடையை அணிந்திருப்பார். ஆனாலும் அவர் பணக்காரர் என்றே உணர்ந்தார், “என்னால் இந்த மொத்த பிரபஞ்சத்திற்கும் உதவ முடியும்” என்று அவர் கூறினார். நிறுவப்பட்ட உண்மையான இருத்தலை பற்றிக்கொள்வதே சுய-போற்றுதலுக்கு காரணமாகிறது, போதிசிட்டா மேம்பாட்டிற்கான மிகப்பெரிய தடையும் அதுவே.” அனைத்து உணர்வுள்ள உயிரினங்கள் மீதும் இரக்கம் கொள்வதே ஆசையை நிறைவேற்றும் ரத்தினம். இதை உணராமல், நம்மை நாமே திசை திருப்புகிறோம். சுய-போற்றுதல் மற்றும் ஏற்றத்தாழ்வை எதிரியாக வைப்பதற்குப் பதிலாக அவற்றை பற்றிக் கொண்டு, உணர்வுள்ள உயிரினங்களுக்கு எதிரான வெறுப்பை நம் எதிரிகளாக வைத்திருக்கிறோம், மேலும் நமது உண்மையான எதிரிகளை நமது நண்பர்களாக வைத்திருக்கிறோம்” என்று ஒரு நூல் சுட்டிக் காட்டுகிறது. “மிகப்பெரிய சாத்தான் மற்றும் பேயுருவம் நமக்கு வெளியே இல்லை, மாறாக சுய- போற்றுதல் எனும் வடிவத்தில் நம்முடைய உடலுக்கு உள்ளே இருக்கிறது” என்கிறது மற்றொரு நூல். 

போதிசிட்டாவுடன் நம்மால் நம்முடைய சுய-போற்றுதல் அணுகுமுறையை அழிக்க முடியும். சுயபோற்றுதலின் காரணமாகவே தீய சக்திகளிடமிருந்து நாம் தீங்கைப் பெறுகிறோம் - விமர்சனங்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நம்மைத் தற்காத்துக் கொள்கிறோம், மேலும் நம்மை ஒழுக்கக்கேடானவர்களாக மாற்றுகிறோம். நமது சொந்த ஆசைகளை திருப்திப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன், நாம் சுய-போற்றுதலுடன் செயல்படுகிறோம், மேலும் நம்மை மகிழ்விப்பதன் மூலம் நமது முக்கிய அக்கறை மற்றும் திட்டத்தை உருவாக்குகிறோம்.

ஒருவரால் சில சமயங்களில் மற்றவர்களை அதிருப்தி அடையச் செய்ய முடியாது, ஆனால் சுய-போற்றுதலுடன், சுயத்தை மகிழ்விக்கும் ஒரு முக்கிய செயலாக மற்றவர்களைச் சிறுமைப்படுத்தி, தீங்கு விளைவிக்கிறோம். சுய-போற்றுதுல் மிகுந்த பெருமையையும் பொறாமையையும் ஏற்படுத்துகிறது. வேறொருவர் எதையாவது பெற்றால், "வாழ்த்துக்கள்" என்று நீங்கள் கூறினாலும், அது உங்களிடம் இல்லை என்று நீங்கள் பொறாமைப்படுவீர்கள். சுய- போற்றுதல் மனப்பான்மை இல்லாவிட்டால், பொறாமைப்படுவதற்குப் பதிலாக, மற்றவர்களின் ஆதாயங்களில் மகிழ்ச்சியடைவதன் மூலம் நீங்கள் நேர்மறையான திறனைக் கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையில் ஒற்றுமையின்மைக்கு காரணம் சுயபோற்றுதலே. நீங்கள் வலுவான சுய போற்றுதல் மனப்பான்மை கொண்டவராக இருந்தால், நீங்கள் மிகவும் தற்காப்புடன் இருப்பீர்கள், மற்றவர்களுடன் மோதுவீர்கள், பொறுமையற்றவராக இருப்பீர்கள், மற்றவர்கள் செய்யும் அனைத்தும் உங்களை எரிச்சலூட்டுவதாகவும், உங்களை உறுத்துவதாகவும் உணர்வீர்கள். கணவன்-மனைவி, பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே இத்தகைய தற்காப்புத்தன்மையின் காரணமாக நிறைய ஒற்றுமையின்மை உள்ளது.

மற்றொரு கடம் கெஷே அவருக்கு 40 வயதாகும் வரை களவாடுபவராக இருந்தார். பல ஏக்கர் விளை நிலம் இருந்த போதும் அவர் கொள்ளைக்காரரானார். பகலில் வழிப்போக்கர்களிடம் கொள்ளையடிப்பது, இரவில் வீட்டை உடைத்து கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டார். ஒரு நாள் அவர் தன்னுடைய பாதையை ஆன்மீகத்தின் பக்கமாக மாற்றி, தன்னுடைய  சுய-போற்றுதல் அணுகுமுறையை அழித்தார். “முன்பு எனக்கு உணவு கிடைக்காது, ஆனால் இப்போது என்னுடைய வாய் காணாத அளவிற்கு நிறைய படையல் கிடைக்கிறது” என்று அவர் சொன்னார். 

இவை அனைத்தும் போதிசிட்டாவின் மேம்பாட்டில் சிந்திக்க உதவியாக இருக்கும். மேரு மலையின் அளவுள்ள சுய-போற்றுதல் மனப்பான்மையுடன் ஒரு குகையில் உங்களைப் பூட்டிக்கொள்வது பயனற்றது. ஆனால், உங்கள் சுய- போற்றுதுல் மனப்பான்மையைக் குறைக்க முடிந்தால், தனிமையில் இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Top