சிந்தனைகளை அமைதிப்படுத்துதல்

06:06
கருத்தியல் ரீதியிலான சிந்தனை இன்றியமையாதது. அச்சிந்தனையின்றி கடையில் உள்ள பொருட்களை ஆப்பிள் அல்லது பேரிக்காய் என வேறுபடுத்திப் பார்க்க முடியாது, மேலும் "காட்சிக்கு இரண்டு டிக்கெட்டுகளை எனக்குக் கொடுங்கள்" என்ற சொற்றொடரையும் நாம் புரிந்து கொள்ள மாட்டோம். அன்றாட வாழ்வில் நமக்கு கருத்தியல் சிந்தனை தேவை, சில நேரங்களில் அது தடையாக இருக்கலாம். உதாரணமாக, தியானத்தில் ஒருநிலைப்படுத்தும் போது, நாம் அனுபவிக்கும் அனைத்து மனபிதற்றல்கள் மற்றும் முன்கருத்துகளை அமைதிப்படுத்த வேண்டும்.

மனதை அமைதிப்படுத்துதல்

ஒருநிலைப்படுத்துதலை அடைவதற்கு நம்முடைய மனதை சாந்தப்படுத்த வேண்டும். சில தியான வழிமுறைகள் விளக்குவதைப் போல, நாம் மேலும் அதிக இயல்பான மன நிலையை அடையலாம். தெளிவாகச் சொல்வதனால், முற்றிலும் ஒன்றுமில்லாத, சோம்பி போன்ற மனநிலையை அடைய விரும்பவில்லை. அதாவது ஒரு ரேடியோவை அணைத்துவிடுவதைப் போன்றதல்ல, இதற்கு தூங்கிவிடுவதே மேல்!  பதற்றத்துடன் இருத்தல், கவலைப்படுதல் அல்லது அச்சப்படுதல் போன்ற மிக சிக்கலான சில உணர்வுகளின் சிக்கலான மனநிலைகளை அமைதிப்படுத்துவதே நம்முடைய இலக்காகும். 

நம்முடைய மனதை நாம் அமைதிப்படுத்துவதனால் நாம் தெளிவான மற்றும் எச்சரிக்கும் மனநிலையை அடையலாம், அங்கு நம்மால் அன்பு மற்றும் புரிதலை உருவாக்க முடியும், அல்லது நாம் அனைவரும் கொண்டிருக்கும் இயல்பு, மனிதாபிமானத்தை வெளிப்படுத்தலாம். இதற்கு ஆழ்ந்த நிம்மதி தேவை, வெறுமனே உடலில் இருக்கும் தசைகள் அல்ல மாறாக மன மற்றும் உணர்ச்சிகளின் இறுக்கத்தில் இருந்தும் ஆழ்ந்த நிம்மதி தேவை, அதுவே இயல்பான அரவணைப்பு மற்றும் மனத்தெளிவு அல்லது வேறு எந்த உணர்வாக இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். 

சிலர் தியானித்தல் என்பதன் அர்த்தம் நாம் சிந்திப்பதை நிறுத்த வேண்டும் என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். ஆனால் சிந்திப்பதை நிறுத்துவதற்குப் பதிலாக, தியானித்தல் அனைத்து தேவையற்ற சிந்தனைகளையும் தடுத்து நிறுத்துகிறது, எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளான ("இரவு உணவிற்கு நான் என்ன சாப்பிடப் போகிறேன்?"), எதிர்மறை சிந்தனை ("நேற்று நீ என்னிடம் மிக மோசமாக நடந்து கொண்டாய். நீ பயங்கரமானவன்!") என்பன போன்ற சிந்தனைகளை நிறுத்துகிறது. இவை அனைத்து மனம் அலைபாய்தல் மற்றும் சிக்கலான உணர்வுகள் வரிசையின் கீழ் வருகின்றன. 

அமைதியான மனநிலையை கொண்டிருக்க, இது வெறும் ஆயுதம் என்றாலும் அதுவே இறுதி இலக்கல்ல. நாம் அமைதியான, தெளிவான மற்றும் அதிக திறந்த மனதை கொண்டிருந்தால், அவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம். நாம் அதனை அன்றாட வாழ்வில் பயன்படுத்த முடியும், மேலும் நாம் அதனை நாம் தியானத்தில் அமர்ந்திருக்கும் போது பயன்படுத்த முயற்சித்து நம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலையின் சிறந்த புரிதலைப் பெற முடியும். சிக்கலான உணர்ச்சிகளில் இருந்தும் புறம்பான சிந்தனைகளில் இருந்தும் விடுபட்ட மனதுடன், நாம் மேலும் தெளிவுடன் முக்கியமான தலைப்புகளான "என்னுடைய வாழ்வில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இந்த முக்கியமான உறவுமுறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? இது ஆரோக்கியமானதா அல்லது ஆரோக்கியம் இல்லாததா?" என்று தெளிவாக சிந்திக்க முடியும். நம்மால் பகுப்பாய முடியும் -இதுவே சுயபரிசோதனையாகும். இவ்வகையான பிரச்னைகளை புரிந்து கொள்வதற்கும் ஆக்கப்பூர்வமான வழியில் சுயபரிசோதனை செய்யவும் நமக்கு தெளிவு தேவை. நமக்கு சலனமில்லாத அமைதியான மனநிலை தேவை நம்மை இந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஒரு ஆயுதமே தியானமாகும்.

கருத்தியல் மற்றும் கருத்தியல் அல்லாத மனநிலைகள்

பல தியான புத்தகங்களும் நாம் நம்முடைய கருத்தியல் சிந்தனைகளில் இருந்து வெளியேறி கருத்தியல் அல்லாத நிலையில் அடைக்கலமடைய வேண்டும் என்பதையே நமக்கு அறிவுறுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் முதலில், இந்த வழிமுறை அனைத்து தியானங்களுக்கும் பொருந்தாது. யதார்த்தத்தை நோக்கிய தியானத்திற்கான மேம்பட்ட தியான நிலையையே இது குறிப்பாக சுட்டிக்காட்டுகிறது. இல்லாவிட்டால், அனைத்து வகைகளான தியானங்களுக்கும் தேவையான ஒற்றை வெளியேற்ற முறையான கருத்தியல் வடிவம் மட்டுமே இருந்திருக்கும். ஆனால் தியான புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கும் பலவிதமான கருத்தியல் வடிவங்களை புரிந்து கொள்வதற்கு, "கருத்தியல்" என்றால் என்னவென்று பௌத்தம் அர்த்தப்படுத்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

கருத்தியல் சிந்தனை என்பது நம்முடைய தலைக்குள் கேட்கும் ஓசையை மட்டும் குறிப்பிடவில்லை

கருத்தியல் என்பது பொதுவாக நாள்தோறும் நம்முடைய மனதிற்குள் கடந்து செல்லும் வார்த்தை சிந்தனைகள் - அல்லது "நம் தலைக்குள் கேட்கும் குரல்" - அந்தச் சிந்தனைகள் கூட கருத்தியல் அற்றதாக மாறும் அதாவது எளிதில் அந்த குரலை அமைதிபடுத்திவிடலாம் என்று சிலர் சிந்திக்கின்றனர். நம்முடைய தலைக்குள் கேட்கும் குரலை அமைதிப்படுத்துவதென்பது ஒரு தொடக்கம் - மிக முக்கியமானதொரு தொடக்கம் - ஆனால் முதல் படி மட்டுமே. இது ஒரு தெளிவான மற்றும் அமைதியான மனதைப் பெறுவதற்காக புறம்பான குழப்பமான எண்ணங்களின் மனதை அமைதிப்படுத்துவதன் ஒரு பகுதியாகும். எதையாவது புரிந்து கொள்வதற்கு, நீங்கள் அதனை கருத்தியல் அல்லாத ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று மற்றவர்கள் சிந்திக்கிறார்கள், கருத்தியல் சிந்தனை மற்றும் சரியான புரிதல் ஒன்றுக்கொன்று பிரத்தியேகமானது என்றும் நினைக்கிறார்கள். அதுவும் கூட விஷயமல்ல.

கருத்தியல் தொடர்பான சிக்கல்களை அவிழ்க்க, முதலில் நாம் எதையாவது புரிந்து கொள்வதில் இருந்து வாய்மொழியாக அவற்றை நம்முடைய சிந்தனைகளில் வேறுபடுத்த வேண்டும். அதனை புரிந்து கொண்டும் புரியாமலும் நம்முடைய சிந்தனைகளில் சிலவற்றை நம்மால் வார்த்தைகளாக்க முடியும். உதாரணமாக, அர்த்தம் புரிகிறதோ இல்லையோ நம்மால் வேற்று மொழியின் மந்திரம் ஒன்றை பாராயணம் செய்ய முடியும். அதே போன்று தான், மனதளவில் ஒன்றைப் பற்றி வார்த்தைகளால் விளக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் நம்மால் சிலவற்றை  புரிந்து கொள்ள முடியும், எடுத்துக்காட்டாக காதலில் இருக்கும் போது எப்படி உணரப்படுகிறது. 

தியானத்தில் கருத்தியல் மற்றும் கருத்தியல் அல்லாத நிலைகள் இருப்பினும், எதையாவது புரிந்து கொள்ளுதல் அல்லது புரிந்த கொள்ளாமை என்பது பிரச்னையல்ல. தியானத்திலும், அன்றாட வாழ்விலும், கருத்தியலோ அல்லது கருத்தியல் அல்லாததோ, மனதளவில் அதனை வாய்மொழியாக்க முடிகிறதோ இல்லையோ, நாம் எப்போதும் புரிதலை விரும்புகிறோம். சிலசமயங்களில் வாய்மொழி உதவும்; சில சமயங்களில் அது பயன் தராது சொல்லப்போனால் தேவையும் இருக்காது. உதாரணமாக, நீங்கள் ஷுவின் நாடாவை கட்டுகிறீர்கள் : உங்களது ஷுவின் நாடாவை எப்படி கட்ட வேண்டும் என்று நீங்கள் புரிந்த கொள்கிறீர்கள். அந்த நாடாவை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும் அதனை எங்கே கட்ட வேண்டும் என்று உண்மையில் உங்களுக்கு வாய்மொழியாக சொல்ல வேண்டுமா? இல்லை. சொல்லப்போனால் ஷுவை எப்படி கட்ட வேண்டும் என்பதை வார்த்தைகளில் விவரிப்பதென்பது நம்மில் பலருக்கம் கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இல்லாவிட்டால், நாம் புரிதலை கொண்டிருக்கிறோம். புரிதல் இல்லாவிட்டால் நம்மால் வாழ்வில் எதையும் செய்ய முடியாது, இல்லையா? நம்மால் கதவைக் கூட திறக்க முடியாது.  

பலரது பார்வையில், வாய்மொழிபடுத்துதல் உண்மையில் உதவிகரமானது; மற்றவர்களுடன் கருத்து பரிமாற வாய்மொழி நமக்குத் தேவை. இருப்பினும், நம்முடைய சிந்தனையில் வாய்மொழி என்பது கட்டாயமாக தேவையில்லை; ஆனால் வாய்மொழி சார்பற்றது, அதாவது உதவிகரமானதாகவோ அல்லது அழிவுகரமான வழியிலோ கூட பயன்படுத்த முடியும். வாய்மொழியை சேர்க்கும் சில பயனுள்ள தியானங்கள் உண்மையில் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, மனதளவில் மந்திரங்களை திரும்பத் திரும்ப உச்சரித்தல் என்பது ஒரு வகையான வாய்மொழி அது ஒரு குறிப்பிட்ட வகையான தாளம் அல்லது அதிர்வை நம்முடைய மனதில் உருவாக்கி தொடர்ந்து செயல்படுத்துகிறது. மந்திரத்தின் அந்த வழக்கமான தாளம் மிகவும் உதவிகரமானது; ஒரு குறிப்பிட்ட மனநிலையில் கவனத்துடன் இருப்பதற்கு அது உதவுகிறது. எடுத்துக்காட்டாக, இரக்கம் மற்றும் அன்பை நாம் உருவாக்கும் போது, ஓம் மணி பத்மே ஹம் போன்ற மந்திரத்தை நீங்கள் பாராணயம் செய்தால், அந்த அன்பு நிலையிலேயே கவனத்துடன் இருப்பதற்கு இது சற்றே எளிதாக இருக்கும், நிச்சயமாக நீங்கள் எதையாவது மனதளவில் சொல்லிக்கொண்டே இல்லாவிட்டாலும் உங்களால் அன்பு நிலையிலேயே கவனத்துடன் இருக்க முடியும். எனவே வாய்மொழிமல் மட்டுமே பிரச்னையல்ல. மற்றொருபுறம், பயனற்ற சொற்களால் அவர்கள் உரையாடும்போது நாம் நிச்சயமாக நம் மனதை அமைதிப்படுத்த வேண்டும்.

கருத்தியல் சிந்தனை என்பது விஷயங்களை மனப் பெட்டிகளாக வகைப்படுத்துதல்

கருத்தியலில் வாய்மொழிதலோ அல்லது புரிதலோ பிரச்னை இல்லை என்றால், சிக்கல் தான் என்ன? கருத்தியல் மனம் என்றால் என்ன? மற்றும் அதில் இருந்து நம்மை நாமே வெளியேற்ற வேண்டும் என்று தியான அறிவுரை என்ன அர்த்தப்படுத்துகிறது? இந்த அறிவுரை தியானத்தின் அனைத்து நிலைகள் மற்றும் மட்டங்களுக்கும், அன்றாட வாழ்க்கைக்கும் கூட பொருந்துமா? இந்த விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டியது மிக முக்கியமாகும். 

கருத்தியல் மனமானது, "நல்லது" அல்லது "கெட்டது", "கருப்பு" அல்லது "வெள்ளை", "நாய்" அல்லது "பூனை" போன்ற பெட்டிகளில் வைப்பதன் மூலம் வகைகளின் அடிப்படையில் சிந்திக்கிறது.

நாம் ஒரு கடைக்குச் செல்கிறோம், நம்மால் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு எது என்றும், கனிந்தது கனியாது எது என்பதையும் வகைபடுத்த முடிய வேண்டும். அது போனறு அன்றாடச் செயல்களில் வகைபடுத்தி சிந்தித்தல் பிரச்னையல்ல. ஆனால் இதர வகையான வகைப்படுதுதலில் பிரச்னை இருக்கிறது. அதில் ஒன்று "முன்முடிவு" என்று நாம் அழைப்பதாகும்.  

முன்முடிவுக்கான ஒரு உதாரணம்: "நீ எப்போதும் என்னிடம் மோசமாகவே நடந்து கொண்டிருக்கிறாய். நீ ஒரு பயங்கரமானவன் ஏனெனில் கடந்த காலத்தில் நீ அப்படியெல்லாம் செய்தாய், இப்போதும் நீ அதைத்தான் செய்வாய் என்று நான் எதிர்பார்க்கிறேன், என்ன நடந்தாலும், நீ ஒரு மோசமானவனாகவே தொடர்ந்து இருக்கப் போகிறாய்" என்று அனுமானிப்பது. இவர் மிக மோசமானவர் தொடர்ந்து நம்மிடம் அப்படியே இருக்கப் போகிறார் என்று நாம் முன்- தீர்மானம் செய்கிறோம் - அதுவே முன்முடிவதகும். நம்முடைய சிந்தனையில் , அந்த மனிதரை "மோசமானவர்" என்று வகைபடுத்தியோ அல்லது பெட்டியிலோ போட்டு வைத்திருக்கிறோம். நிச்சயமாக,நாம் அவ்வாறு சிந்தித்தால் மற்றவரிடமும் அந்த சிந்தனையை முன் நிறுத்தவோம், அதாவது "அவர் மோசமானவர்; என்னிடம் எப்போதும் பயங்கரமாக நடந்து கொள்வார்," என்று முன்னிலைப்படுத்துவதால் நமக்கும் அந்த நபருக்கும் இடையில் பெரிய இடைவெளி ஏற்படுகிறது. ஆதலால் முன்முடிவு என்பது நாம் வகைபடுத்தக் கூடிய ஒரு மனநிலை; விஷயங்களை நாம் மனப்பெட்டிகளுக்குள் போடுகிறோம். 

கருத்தியலின்றி இருத்தல்

கருத்தியல் அல்லாத பல நிலைகள் உள்ளன, ஆனால் ஒரு நிலையானது சூழ்நிலை எழும் போது வெளிப்படையாக இருக்க வேண்டும். இதன் பொருள் எல்லா கருத்தியல் புரிதலையும் கைவிடுவது என்பதல்ல. எடுத்துக்காட்டாக, பலரை கடித்த ஒரு நாய் இருக்கிறது, பின்னர் நமது சிந்தனையில் "கடி நாய்" என்று வகைபடுத்தி, அந்த நாய்க்கு அருகில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கிறோம். விலங்குகளுக்கு அருகில் செல்லும் போது காரணத்துடனான எச்சரிக்கை இருக்க வேண்டும், ஆனால் "அந்த நாய் நிச்சயமாக என்னை கடிக்கும், அதனால் நான் அதன் அருகில் செல்ல முயற்சிக்க மாட்டேன்" என்ற முன்முடிவை கொண்டிருக்கக் கூடாது.   எழும் சூழலை ஏற்றுக்கொள்வதற்கு இடையில் ஒரு மென்மையான சமநிலை உள்ளது, அதே நேரத்தில் நிலைமையை முழுமையாக அனுபவிப்பதை முன்முடிவுகள் தடுக்கிறது.

எல்லா தியானங்களிலும் தேவைப்படுகிற கருத்தியல் இல்லாத நிலை, முன்முடிவுகள் இல்லாத மனம்.

தியானிப்பதற்கு மிக முக்கியமான பொதுவான அறிவுரைகளில் ஒன்று எதிர்பார்ப்புகள் மற்றும் கவலைகள் இன்றி தியானித்தலாகும். தியான அமர்வைச் சுற்றியுள்ள முன்முடிவுகள் உங்கள் தியான அமர்வு பிரமாதமாக நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, அல்லது உங்கள் கால்கள் வலிக்குமோ என்ற கவலை அல்லது "நான் வெற்றியடைய மாட்டேன்" என்ற எண்ணமாக இருக்கலாம். மனரீதியில் நீங்கள் அவற்றை சொன்லும் இல்லாவிட்டாலும் இவ்வகையான எதிர்பார்ப்பு மற்றும் வருத்தப்படும் சிந்தனைகளே முன்முடிவுகள் எனப்படுகிறது.  இந்த சிந்தனைகளே வரப்போகின்ற  தியான வகுப்புகளை "அற்புதமான அனுபவம்" அல்லது "வலிமிகுந்த அனுபவம்" என்று வகைப்படுத்தும் அல்லது மனப்பெட்டியில் உங்களை பொருத்துகிறது. தியானத்திற்கான கருத்தியல் அல்லாத அணுகுமுறை, எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதும், தியான வழிமுறைகளின்படி அதைச் சமாளிப்பதும், சூழ்நிலையின் மீது ஒரு தீர்வைத் தராமல் இருப்பதும் ஆகும்.

சுருக்கம்

பல்வேறு வகையான கருத்தியல் சிந்தனைகளைப் புரிந்து கொள்ளாமல், அவை அனைத்தும் தியானத்திற்கும் அன்றாட வாழ்க்கைக்கும் கூட தீங்கு விளைவிக்கும் என்று நாம் தவறாக கற்பனை செய்யலாம். பெரும்பாலான தியானங்களில், நம் நம்முடைய தலைக்குள் கேட்கும் குரலை அமைதிப்படுத்த வேண்டும் மற்றும் அனைத்து முன்முடிவுகளையும் கைவிட வேண்டும். எதையாவது புரிந்து கொண்ட மிக மேம்பட்ட பயிற்சியாளர்ளைத் தவிர, தியானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஒன்றைப் புரிந்துகொள்வது, அதை நாம் வார்த்தைகளில் கூறினாலும் இல்லாவிட்டாலும், அதை ஒரு மன பிரிவில் பொருத்துவது வேண்டி இருக்கிறது.

Top