"ஏதாவது செய்வது அல்லது சொல்வது போன்ற உணர்வு மற்றும் நிர்பந்தமாக அதைச் செயல்படுத்துவது ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியில், விளைவுகளை மதிப்பிடுவதற்கும் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பதை நிறுத்துவதற்கும் இடம் கிடைக்கும்."
Meditations conquering compulsiveness

விளக்கம்

கர்மா என்பது நம்முடைய அனைத்து நிர்பந்தம் குறித்தது.  இது சில குழப்பமான உணர்ச்சி அல்லது குழப்பமான மனப்பான்மையால் உந்தப்பட்டு, ஒரு காந்தத்தைப் போல, எதையாவது செய்வதில் ஈடுபட, ஏதாவது சொல்ல, அல்லது ஏதாவது சிந்திக்கும்படி கட்டாயப்படுத்தும் தூண்டுதல்களை அல்லது மன தூண்டுதல்களைக் குறிக்கிறது.

இந்த கட்டாய தூண்டுதல்களை கட்டாயமாகச் செயல்படுத்துவது உடல், வாய்மொழி அல்லது மனச் செயலை கட்டாயமாக மீண்டும் செய்வதற்கான போக்கை உருவாக்குகிறது. பல்வேறு சூழ்நிலைகள் எழும்போது – உள்ளாற எழும் குழப்பமான உணர்வுகள் போன்றவை அல்லது வெளிப்புறத்தில் நாம் இருக்கும் சூழல்கள் அல்லது நாம் உடன் இருக்கும் நபர் - இந்த போக்குகள் அந்த செயலை மீண்டும் செய்வது போன்ற உணர்வுக்கு வழிவகுக்கும். அதன் பின்னர், வழக்கமான செயலின் விளைவுகளைப் பிரதிபலிக்காமல், நாம் அதை கட்டாயமாக மீண்டும் செய்கிறோம். இந்த கட்டாய நடத்தையும் கூட மகிழ்ச்சியின்மை உணர்வு அல்லது எப்போதும் திருப்தியடையாத வகையான மகிழ்ச்சி போன்ற முடிவையே தரும். கர்மா என்பது அத்தகைய நடத்தைக்கு பின்னால் உள்ள கட்டாய தூண்டுதல்களும் நிர்ப்பந்தமும் ஆகும்

இதுதான் சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது, ஏனெனில் குழப்பமான உணர்வுகள் இந்த வடிவங்களை இயக்குகின்றன:

  • கட்டாய நடத்தை முறைகள் - இணைப்பு போன்றவை
  • எதையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக, தொலைபேசிகளில்  தகவல்களையும், முகநூல் பக்கத்தையும் நாம் கட்டாயமாக சரிபார்க்கிறோம்; அல்லது மற்றவர்களின் உணர்வுகளை அப்பாவியாகவும், சிந்திக்காமலும் இருப்பதால், நமது பெற்றோருடன் இரவு உணவு மேஜையில் அமர்ந்திருக்கும் போதும் குறுஞ்செய்தி அனுப்புகிறோம்; அல்லது போக்குவரத்தில் சிக்கிக்கொண்டிருக்கும்போது கோபம் காரணமாக கட்டாயமாக ஒலிப்பானை அடிக்கச் செய்து மற்றவர்களுக்கு முன்னால் நம்மை துண்டாக்க முயற்சிக்கிறது.
  • கட்டாயப்படுத்தும் பேச்சு முறைகள் – கட்டாயமாக புகார் கூறுவதனால் வழிவகுக்கப்படும் அதிருப்தி போன்றவை; சுய-முக்கியத்துவம் விரோதம் வழிவகுக்கும் கட்டாய விமர்சனம் மற்றும் கட்டாயமாக முரட்டுத்தனமாக பேசுதல் கொடுமைப்படுத்துதல் போன்றவை; கூச்சம் மற்றும் சுய மதிப்பு குறைந்த உணர்வு மிகவும் மென்மையாக பேச வழிவகுக்கும்) 
  • கட்டாயப்படுத்தும் சிந்தனை முறைகள் – பாதுகாப்பின்மை வழிவகுக்கும் கட்டாய கவலை போன்றவை; யதார்த்தம் குறித்த அப்பாவித்தனம் அல்லது யதார்த்தம் கட்டாய பகல்கனவிற்கு வழிவகுக்கும் என்பதால் அதனை தவிர்க்க விரும்புதல்.

மேலே உள்ள இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும் சுய-அழிவுகரமான கட்டாய நடத்தை முறைகள், அவை மகிழ்ச்சியற்ற நிலைக்கு வழிவகுக்கின்றன. ஆனாலும் கூட அவை ஆக்கப்பூர்வமான ஒன்று எப்போதும் நரம்பியல் தன்மை கொண்டவையல்ல – பரிபூரணவாதம், மற்றவர்களின் தர்க்கத்தை கட்டாயமாக சரிசெய்தல், கட்டாயமாக நல்லது செய்பவர்கள் எப்போதும் "முடியாது," என்று சொல்லாத பணிக்குயடிமையானவர்கள் போன்ற பல இருக்கின்றன. அவற்றிற்கு பின்னால் நேர்மறை உணர்வுக்கான கூறும் கூட இருக்கக் கூடும், அதாவது மற்றவர்களுக்கு உதவ விரும்புவது, அல்லது சிறப்பாக செய்வது, ஏனெனில் அவர்கள் கொண்டிருக்கும் “நான்”  என்பதற்கு பின்னால் இருக்கும் சிந்தனை மற்றும் பழக்கம் – “நான் நன்றாக இருக்க வேண்டும், “நான்” தேவைப்பட வேண்டும், “நான்” சிறப்பாக இருக்க வேண்டும்,”இவை தற்காலிக மகிழ்ச்சியைத் தரலாம், அதாவது நாம் எதாவது நல்லதாக செய்கிறோம், ஆனால் அந்த மகிழ்ச்சி நீடித்திருக்காது மேலும் அது ஒரு பிரச்னை. உதாரணமாக, நாம் எப்போதும் போதுமான நல்லவராக இல்லை என்றோ அல்லது நம்முடைய மதிப்பை நிரூபிப்பதற்காக நாம் இன்னும் வெளியே சென்று நல்லது செய்ய வேண்டும் என்றோ உணர்வது.

முதலில் நாம் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் என்ன செய்வதாக உணர்கிறோம் அல்லது எதையாவது சொல்கிறோம் என்பதற்கும் கட்டாயமாக அதைச் செய்கிறோம் என்றால் அதற்கான வித்தியாசத்தையும் அடையாளம் காண்பது சாத்தியமாகும். இடையில் நாம் மதிப்பீடு செய்யக்கூடிய ஒரு இடைவெளி உள்ளது, அதன் பின்னால் சில குழப்பமான உணர்ச்சிகள் இருக்கிறதா, சாத்தியமில்லாத ஏதோ ஒன்றிற்கு என்னை நானே கட்டாயப்படுத்தி தள்ளுகிறேனா (எப்போதும் சிறந்தது போல) இருக்க நான் கட்டாயமாக என்னைத் தள்ளுகிறேனா, அதைச் செய்ய சில உடல் தேவை இருக்கிறதா (ஒரு நமைச்சலைக் கீறி விடுவது போல), இது நன்மை பயக்குமா அல்லது தீங்கு விளைவிக்குமா? எனவே, பாகுபாடு காண்பிக்கும் விழிப்புணர்வுடன் மதிப்பீடு செய்து, பின்னர் நாம் என்ன செய்ய வேண்டும் அல்லது சொல்ல விரும்புகிறோம் என்பதைச் செயல்படுத்துவதற்கு ஒரு நல்ல காரணம் இருப்பதைக் கண்டால் இந்த உணர்வைச் செயல்படுத்தக்கூடாது என்று சுய கட்டுப்பாட்டைக் கொண்டிருங்கள், ஆனால் சில நரம்பியல் காரணங்களுக்காக மட்டுமே. இதற்கு நாம் எவ்வாறு செயல்படுகிறோம், பேசுகிறோம், சிந்திக்கிறோம், எனவே நாள் முழுவதும் உள்நோக்கத்துடன் இருப்பது மற்றும் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

இலக்கானது பாகுபாடான விழிப்புணர்வைப் பயன்படுத்தி, முடிந்தவரை கட்டாயமாக செயல்படாமல் இருப்பதும், நமது நடத்தைக்குப் பின்னால் நேர்மறையான உணர்ச்சிகளைக் கொண்டு, இயன்ற வரையில் சிறிது குழப்பத்துடன் நம்மைப் பற்றியும், யதார்த்தம் என்ன என்றும் அறிதலாகும்.

தியானம்

  • சுவாசத்தில் கவனம் செலுத்தி அமைதிபடுத்துதல்
  • உங்கள் நிர்பந்தமான செயல், பேச்சு மற்றும் சிந்தனை வடிவங்களை அடையாளம் காண முயற்சிக்கவும்.
  • அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து அதற்குப் பின்னால் ஏதேனும் குழப்பமான உணர்ச்சி இருக்கிறதா அல்லது ஏதோ ஒன்றை புரிந்து கொள்ள முடியுமா என்பதை ஆராயுங்கள் – அதாவது எப்போதும் தவறு செய்யாமல் இருப்பது போல.
  • நீங்கள் நிர்பந்தமாக செயல்படும் போது அதனை அடையாளம் காண முயற்சியுங்கள், அது ஒரு வகை சிக்கலுக்கு காரணமாகும், ஒன்று உங்களுக்குள்ளாகவோ, அல்லது நீங்கள் மற்றவர்களின் பிரச்னைகளுக்கும் கஷ்டங்களுக்கும் காரணமாக இருப்பீர்கள். அது மகிழ்ச்சியற்றதாகவோ அல்லது திருப்தியற்ற குறுகிய கால மகிழ்ச்சியை உணரவோ வழிவகுக்கிறது.
  • நீங்கள் என்ன சொல் மற்றும் செய்வதாக உணர்கிறீர்கள் என்பதை மதிப்பிட்டு பாகுபாடுத்த பயிற்சி செய்ய முயற்சிக்கிறீர்கள் முயற்சிப்பதாக தீர்மானியுங்கள், சாந்திதேவா அறிவுறுத்தியது போல, அது சுய – அழிவோ அல்லது உங்களது தன்முனைப்பிற்கு வலுவூட்டுவதாக இருந்தாலும், சுய – கட்டுப்பாட்டை பயிற்சித்து ஒரு மரத்துண்டு போல இருக்கவும். 
  • நீங்கள் தியானத்தில் அமர்ந்திருக்கும் போது கவனியுங்கள், நீங்கள் ஒரு நமைச்சலை சொறிவது போலவோ அல்லது உங்களது கால்களை நகர்த்துவதைப் போலவோ உணர்ந்தால் இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நீங்கள் சொறிந்தாலோ அல்லது அரிப்போ, நீங்கள் என்ன செய்ய விரும்புகிறர்களோ அதைச் செய்யலாமா வேண்டாமா என்பதை எவ்வாறு தீர்மானிக்க முடியும். நீங்கள் செயல்படாததன் நன்மை அதைச் செயல்படுத்துவதன் நன்மையை விட அதிகமாக இருக்கும் என்று நீங்கள் தீர்மானிக்கும் போது நீங்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கலாம் மற்றும் மரத் துண்டைப் போல இருக்க முடியும் என்பதைப் பாருங்கள். 
  • உங்களுடைய அன்றாட வாழ்வில் நிர்பந்தமான நடத்தைகளால், நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் மற்றும் அதைச் செய்யும் போது என்ன உணர்கிறீர்கள் என்பதற்கும் இடையிலான இடத்தில் நீங்கள் அதிக கவனத்துடன் இருக்க முயற்சிக்கிறீர்கள், நீங்கள் செயல்படாததன் நன்மை அதைச் செயல்படுத்துவதன் நன்மையை விட அதிகமாக இருக்கும் என்று நீங்கள் தீர்மானித்து ஒரு மரத் துண்டைப் போல இருக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள். 

சுருக்கம்

நாம் நம்முடைய நிர்பந்தமான சுய-அழிவு நடத்தை, துன்பம் மற்றும் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் சிக்கலான உணர்வுகளால் கிடைப்பவை என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இருப்பினும் ஆக்கப்பூர்வமாக, நேர்மறை வழியில் நிர்பந்தமாக செயல்பட்டால், அதிலும் அவை பாதுகாப்பின்மை மற்றும் நம்மை பற்றியே யதார்த்தமான எண்ணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டால், நமக்கு குறுகிய – கால மகிழ்ச்சி கிடைக்கலாம், அதாவது ஒரு பணியைச் சிறப்பாகச் செய்தபின் அல்லது உதவியாக இருந்தபின் இருக்கும் மனநிலை போல, ஆனால் நாம் மீண்டும் நம்மை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயமாக உணர்கிறோம்.

நாம் அமைதியாக இருந்து நாம் என்ன செய்ய, சொல்ல அல்லது சிந்திக்கிறோம், நாம் நிர்பந்தமாக என்ன செய்கிறோம் என்பதற்கும் இடையேயான இடத்தை நாம் கைப்பற்ற வேண்டும். நாம் உள்நோக்கத்துடன், கவனத்துடன், பாகுபாடு காட்ட வேண்டும். அதிஷாத எழுதிய போதிசத்வா ஆபரணங்களின் மாலை(28): புத்தகத்தில் கூறியிருப்பது போல, 

பலருக்கு நடுவில் இருக்கும்போது, என் உரையை சரிபார்க்கிறேன்; தனியாக இருக்கும்போது, என் மனதை சரிபார்க்கிறேன்.

ஆனால் நாம் எப்போதும் சோதித்துக்கொண்டிருப்பதால், கடினமான மற்றும் இயந்திரமயமான தீவிரத்திற்குச் செல்லாமல் இதைச் செய்ய முயற்சிக்கவும். நீங்கள் இவ்வாறு செய்தால் நீங்கள் தன்னிச்சையாக இருக்க மாட்டீர்கள் என்று நீங்கள் ஆட்சேபிக்கக்கூடும், ஆனால் தன்னிச்சையாக உங்கள் சிந்தையில் வரும் எதையும் செய்வதன் மூலம், அதன் நன்மை அல்லது தகுதியை மதிப்பீடு செய்வதில்லை, பிறகு நள்ளிரவில் ஒரு குழந்தை அழுதால், நாம் எழுந்திருக்க விரும்பவில்லை என்றால், நாம் எழுந்திருக்க மாட்டோம். அல்லது குழந்தையின் அழுகையை நிறுத்த கைகளைத் தட்டி அதட்டலாம் என்று உணர்ந்தால், நாம் அவ்வாறே செய்கிறோம். எனவே, நமது நிர்பந்தமான நடத்தையுடன் சிக்கல்களைச் சமாளிக்க - கர்மாவுடனான நமது பிரச்சினைகளுக்கு - நாம் செய்ததைப் போலவே, மீண்டும் மீண்டும் தியானிக்க வேண்டும், இதனால் நமக்கு நாமே ஒரு போலீஸ்காரரோ அல்லது காவல்துறையினரோ இருப்பது போன்ற கடினமான மற்றும் கடுமையானவர்களாக மாற மாட்டோம், ஆனால் நாம் என்ன செய்வதாக உணர்கிறோம் என்பதில் கவனமாக இருப்பது தானாகவும் இயல்பாகவும் மாறும்.

Top