மூன்றாவது மேன்மையான உண்மைமூன்றாவது மேன்மையான உண்மை: துன்பத்தின் உண்மையான நிறுத்தம்

வாழ்வில் நாம் அனுபவிக்கும் உண்மையான துன்பங்களை ஒரு முறை உணர்ந்து அதற்கான காரணங்களை அடையாளம் கண்டால், உண்மையிலேயே அதில் இருந்து நாம் விடுபட விரும்பினால், அவை மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும். புத்தர் தனது சொந்த அனுபவத்தில் உணர்ந்து பின்னர் போதித்த மூன்றாவது மேன்மையான உண்மை என்னவென்றால், எல்லா துன்பங்களுக்கும் அவற்றின் காரணங்களுக்கும் ஒரு உண்மையான நிறுத்தம் மீண்டும் நிகழாமல் இருப்பது சாத்தியமா. அது சாத்தியமே ஏனெனில் நம்முடைய மனதின் இயல்பு தூய்மையானது.

உண்மையான துன்பங்கள் மற்றும் இந்த துன்பங்களுக்கான உண்மையான காரணங்கள்

வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பல தனிப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும், உண்மையான துன்பத்தின் நிதர்சனம் என்பது நமது துன்பங்களை மீண்டும் மீண்டும் எழுவதை நாம் நிலைநிறுத்துகிறோம் என்று புத்தர் போதித்தார். மகிழ்ச்சியின்மையை அனுபவிப்பதை நாம் நிலைநிறுத்துகிறோம் மற்றும் திருப்தியில்லாத மகிழ்ச்சி கட்டுப்பாடின்றி மேலும் கீழும் செல்கிறது, வரையறுக்கப்பட்ட உடல் மற்றும் மனதை ஒவ்வொரு மறுபிறப்பிலும் கொண்டிருப்பதை நிலைநிறுத்துகிறோம் இந்த அடிப்படையுடன் உணர்ச்சிகளின் ஏற்ற இறக்கங்களை நாம் அனுபவிக்கிறோம். இவைகளை நாம் நிலைநிறுத்துவதற்கான உண்மையான காரணங்கள் நம் மனதிற்குள்ளேயே இருக்கின்றன என்றும் புத்தர் போதித்தார்.

நமக்கும் மற்றவர்களுக்கும் நமது நடத்தையின் விளைவுகள் மற்றும் நாம், மற்றவர்கள் மற்றும் எல்லா நிகழ்வுகளும் எப்படி இருக்கின்றன என்பது பற்றிய தவறான யதார்த்தத்தை நம் மனம் முன்வைக்கிறது. "நான்" என்று அழைக்கப்படும் சில உறுதியான, தன்னிறைவான நிறுவனமாக நாம் இருக்கிறோம் என்று தவறாக கற்பனை செய்கிறோம். 

மேலும், நம் தலையில் உள்ள குரல் நம் மனதில் இருப்பதாகத் தோன்றுவதால், அல்லது விஷயங்களைப் புரிந்துகொள்வதற்கும் சிந்திக்கவும் நாம் பயன்படுத்தும் ஒரு சாதனத்தைப் போலவே கருதுவதால், நம் மனமும் நம் தலையில் உள்ள சில உறுதியான நிறுவனங்கள் என்று நாம் தவறாகக் கற்பனை செய்கிறோம். இந்த கணிப்புகள் எதுவும் யதார்த்தத்துடன் ஒத்துப்போவதில்லை என்பது நமக்கு தெரிவதில்லை, ஆனால், அதைவிட மோசமாக, அவை செயல்படும் என்று நாம் நம்புகிறோம். 

எப்போதாவது உங்களுக்காகவே நீங்கள் வருத்தப்பட்டிருக்கிறீர்களா “யாருமே என்னை நேசிக்கவில்லை; யாருக்கும் நான் தேவையில்லை?” என்று சிந்தித்திருக்கிறீர்களா அல்லது முற்றிலும் அழுத்தத்திற்கு தள்ளப்பட்டு “என்னால் எதையும் கையாள முடியாது;எனக்கு இது மிக அதிகம்?” என்று சிந்தித்திருக்கிறீர்களா? இவை மகிழ்ச்சியான மனநிலைகளா? நிச்சயமாக இல்லை. நாம் சுய பரிதாபத்திலும் மகிழ்ச்சியின்மையிலும் மூழ்கலாம், ஆனால் இந்த உணர்வுகள் இல்லாமல் போக வேண்டும் என்றும் நாம் ஏங்குகிறோம். நாம் இந்தச் சூழலை எப்படி உணர்கிறோம் என்பதே இங்கு பிரச்னை. இந்த மகிழ்ச்சியின்மை ஒரு இருண்ட மேகம், அதைச் சுற்றி ஒரு திடமான கோட்டிற்குள் தன்னிறைவு பெற்று, "நான்" என்ற ஒன்றை தொங்கவிட்டு, ஒரு திடமான கோட்டிற்குள் தன்னிறைவு பெற்றிருக்கும் ஒரு வண்ணமயமான புத்தகமாக இது உணர்கிறது. 

இந்த ஏமாற்றுத் தோற்றம் யதார்த்தத்துடன் ஒத்துப்போகிறது என்று நம்புவதன் அடிப்படையில் – ஏனெனில் அப்படி உணர்வதால் - ஒருவர் நம்மை நேசிக்க வேண்டும் என்ற ஏக்க ஆசை அல்லது யாரோ ஒருவர் நம்மிடம் அன்பைக் காட்டாதபோது கோபப்படுதல் போன்ற குழப்பமான உணர்ச்சிகளை உருவாக்குகிறோம். இந்த குழப்பமான உணர்ச்சிகள்  யாரோ ஒருவர் நம்முடன் நேரத்தை செலவிட வேண்டும் மற்றும் நம் மீது அன்பு காட்ட வேண்டும் என்ற அர்த்தமில்லாத கோரிக்கையை ஏற்படுத்தும் வலுக்கட்டாய கர்மாவைத் தூண்டுகிறது.  அவர்கள் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டாலும், நாம் அனுபவிக்கும் எந்தவொரு குறுகிய கால மகிழ்ச்சியும் போதுமானதாக இருக்காது, மேலும் மகிழ்ச்சியற்ற சூழ்நிலையை நிலைநிறுத்துவதற்கு நாம் அதிகமாகக் கோருகிறோம்.

இது போன்ற சூழலில், நம்முடைய மனம் குழப்பம் அடைவதுடன், சஞ்சலத்துடனும் இருக்கிறது. நாம் நேர்வழியில் சிந்திப்பதில்லை, மேலும் நம்முடைய நடத்தையானது கட்டுப்பாட்டை மீறுகிறது. ஆனால் இயற்கையாக எழும் குழப்பமா? அல்லது இது மன இயல்பின் குழப்பமான அங்கமா? 

இந்த கேள்விக்கு பதிலளிக்க, பௌத்தம் “மனம்” என்பதை என்னவாக அர்த்தப்படுத்துகிறது என்பதை நாம் அறிய வேண்டும். மனம் என்பது நம் தலையில் உள்ள சில தன்னடக்கமான "பொருள்" அல்ல, மாறாக அது மன செயல்பாட்டைக் குறிக்கிறது. இது விஷயங்களை அனுபவிக்கும் தனிப்பட்ட, மனச் செயல்பாடு. பல சூழ்நிலைகளில் நாம் பல விஷயங்களை அனுபவிப்பதால் அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது, ஆனால் அதன் வழக்கமான இயல்பு எப்போதும் ஒரே விதமாக இருக்கிறது. அதன் ஆழமான இயல்பும் கூட எப்போதும் அப்படியே இருக்கிறது - இது சில சாத்தியமற்ற வழிகளில் இல்லாதது.

இருப்பு குறித்து நமது மனங்களில் தவறான கற்பனை செய்ய வாய்ப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு, மனதை ஒரு உறுதியான உட்பொருளாகக் கருதுகிறோம், அது "நான்" என்ற உறுதியான உட்பொருளுடன் ஒத்ததாகவோ அல்லது அத்தகைய "நான்" பயன்படுத்தும் ஏதோ ஒன்றாகவோ இருக்கிறது. இந்தத் தவறான பார்வைகள் எதுவும் மனதின் உண்மையான இயல்புடன் ஒத்துப்போவதில்லை - அவை வெறும் கற்பனைகள் மற்றும் மனதின் இயல்பின் ஒரு பகுதியாக இல்லை - இந்தத் தவறான பார்வைகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்து மன நிலைகளும் மனதின் இயல்பின் பகுதிகள் அல்ல. இந்த மன நிலைகளில் "நான்" என்ற நமது தவறான எண்ணங்களும், அந்த "என்னை" பாதுகாப்பதற்காக எழும் குழப்பமான உணர்ச்சிகளும், "நான்" என்ற முட்டுக்கட்டை போடும் பயனற்ற செயல்களுக்கு நம்மை இழுக்கும் கட்டாயத் தூண்டுதல்களும் அடங்கும்.  

ஏனெனில் இவை எதுவுமே மன இயல்பின் பகுதிகள் அல்ல மேலும் அவை அந்த இயல்பின் தவறான புரிதல்கள் அடிப்படையிலானவை, அந்த தவறான புரிதலை சரியான புரிதலால் இடமாற்றம் செய்தால் எப்போதைக்குமாக அதனை நீக்கலாம். மறுபுறம் ஆக்கப்பூர்வமான உணர்வுகளான அன்பு மற்றும் இரக்கம் மன இயல்பின் தவறான புரிதல்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. ஏனெனில் இந்த பெரிய வித்தியாசத்தினால், சரியான புரிதலால் அவற்றை இடமாற்றம் செய்ய முடியவில்லை.

அப்படியானால், துன்பத்தின் உண்மையான நிறுத்தம் என்பது நம் மனதை நிறுத்துவது அல்ல. அன்பு, இரக்கம் மற்றும் சரியான புரிதல் போன்ற நல்ல குணங்களுடன் நமது மனங்களானது ஒரு ஜென்மத்தில் இருந்து மற்றொரு ஜென்மத்திற்கு செல்கிறது. அறியாமை, குழப்பமான உணர்ச்சிகள் மற்றும் கட்டாய கர்ம தூண்டுதல்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரையறுக்கப்பட்ட உடல்கள் மற்றும்  மனதுடன் நமது கட்டுப்பாடற்ற மறுபிறப்பு முடிவுக்கு வருகிறது.

உண்மையான நிறுத்தங்களுக்கான நான்கு அம்சங்கள்

மூன்றாவது மேன்மையான உண்மை, உண்மையான நிறுத்தம், நான்கு அம்சங்களை கொண்டிருக்கிறது. 

  • முதலாவது, இது அனைத்து வகையான துன்பங்களின் எழுச்சியையும் நிரந்தரப்படுத்தும் உண்மையான காரணங்களின் உண்மையான நிறுத்தமாகும். துன்பத்தின் எந்தவொரு குறிப்பிட்ட அத்தியாயமும் தானாகவே முடிவுக்கு வரும், ஏனென்றால் காரணங்கள் மற்றும் நிபந்தனைகளாலும் பாதிக்கப்படும் அனைத்தும் நிரந்தரமற்றவை மற்றும் தவிர்க்க முடியாமல் நின்றுவிடும். இருப்பினும் "ஒரு உண்மையான நிறுத்தம்," என்பதன் பொருள் அத்தகைய அத்தியாயங்கள் மீண்டும் நிகழாது என்பதாகும். ஏனெனில் மனதின் இயல்பு தூய்மையானது - முற்றிலும் இந்த உண்மையான காரணங்களில் இல்லாதது என்ற அர்த்தத்தில் - இந்த உண்மையைப் புரிந்துகொள்வது, உண்மையான துன்பங்கள் எழுவதை நாம் நிரந்தரமாக்குவதற்கு எந்த வழியும் இல்லை என்ற தவறான எண்ணத்தை எதிர்க்கிறது. 
  • இரண்டாவதாக, உண்மையான நிறுத்தம் என்பது அமைதியான நிலை, ஏனெனில் அனைத்து சிக்கலான மனக் காரணிகளும் சமாதானப்படுத்தப்படுகின்றன.  ஒரு வலுவான வலிநிவாரணியை உட்கொண்டு, எதையும் உணராமல் இருப்பது போல, ஆழ்ந்த ஒருநிலைப்படுத்தல் நிலையை அடைவது நமது பிரச்சனைகள் அனைத்தையும் உண்மையாக நிறுத்துவதாகும் என்ற தவறான எண்ணத்தை இது எதிர்க்கிறது. வலி மற்றும் துன்பம் இல்லாமல், இத்தகைய நிலைகளில் நாம் எவ்வளவு காலம் இருந்தாலும், அது நமது பிரச்சனைகளுக்கான உண்மையான காரணங்களை அகற்றாது. இது ஒரு தற்காலிக கால அவகாசம் மட்டுமே. ஒருநிலைப்படுத்தல் முடிவுற்று, மருந்தின் தாக்கம் குறைந்தால், நமது பிரச்சினைகள் மீண்டும் ஏற்படுகின்றன. 
  • மூன்றாவதாக, ஒரு உண்மையான நிறுத்தம் ஒரு உயர்ந்த நிலை. உலக உருண்டையில் எந்த சாதனையையும் விட இது உயர்ந்தது. ஒரு மெய்நிகர் உலகத்தை நாம் உருவாக்கிவிட்டு தப்பித்தாலும், உண்மையான துன்பங்களிலிருந்தும் அவற்றின் உண்மையான காரணங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியாது. நமது பிரச்சனைகள் "உண்மையான உலகம்" என்று சொல்லப்படுவதில் இருந்து விலகிச் செல்லவில்லை.
  • கடைசியாக, ஒரு உண்மையான நிறுத்தம் என்பது அனைத்து உண்மையான துன்பங்களிலிருந்தும் அவற்றின் உண்மையான காரணங்களிலிருந்தும் ஒரு திட்டவட்டமான வெளிப்பாடாகும், அது ஒரு பகுதி அல்லது தற்காலிக தோற்றம் மட்டுமல்ல. இந்த தோற்றம் அடுக்கடுக்கதக மற்றும் நிலைகளில் நிகழ்ந்தாலும் - நாம், மற்றவர்கள் மற்றும் அனைத்தும் எப்படி இருக்கிறது என்பது பற்றிய அறியாமை மற்றும் தவறான எண்ணங்கள் பழக்கங்கள் மற்றும் போக்குகளாக ஆழமாகப் பதிந்திருப்பதால் - அவை மீண்டும் மீண்டும் வராதபடி அவற்றை மொத்தமாக அகற்றுவது சாத்தியமில்லை. ஏனெனில் அவை மன இயல்பின் அங்கமல்ல. அவை நொடிப்பொழுதில் கறைபடியக்கூடியவை ஏனெனில் மனம், இயல்பிலேயே தூய்மையானது.

சுருக்கம்

நம்முடைய உண்மையான துன்பங்களை நிரந்தரமாக்குவதற்கான உண்மையான காரணங்களிலிருந்து நம்மை நாமே நிரந்தரமாக விடுவித்துக் கொள்ள முடியும் என்ற நிலையில், அவற்றைக் குறைப்பதில் அல்லது தற்காலிகமாக அவற்றை அடக்குவதில் நாம் ஏன் மட்டுபடுத்திக்கொள்ள வேண்டும்? நிச்சயமாக, அவற்றை என்றென்றும் அகற்றுவதற்கு செயலாற்றும் போது, அவற்றின் போக்கு மற்றும் தீவிரத்தை படிப்படியாக குறைக்க வேண்டும், ஆனால் நாம் அனைவரும் அவற்றின் உண்மையான நிறுத்தத்தை அடைய முடியும் என்று புத்தர் சுட்டிக்காட்டினார். ஏன் குறைவான ஏதோ ஒன்றை நோக்கமாக வைக்க வேண்டும்?  

Top