பொறுமையின் பரிபூரணம்: சாந்திபரமிதா

"பொறுமை என்பது ஒரு நற்குணம்," போன்றதாகும். அதனால் நாம் எப்போதும் எல்லாவற்றையும் பொறுத்துப் போக வேண்டுமா? பௌத்தத்தில் பொறுமை என்பது ஒரு சக்திவாய்ந்த பயிற்சி அதன் பொருள் வெறுமனே எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு போவதல்ல, மாறாக நம்முடைய மனதுடன் நாம் வீரியமாக செயல்பட்டு அது சிக்கலான உணர்ச்சிகளிடம் வீழாமல் இருப்பதை உறுதிபடுத்துவதாகும். பொறுமையானது நாம் மற்றவர்கள் என இருவரும் பலனடைவதற்காக செயலாற்றும் உறுதியைத் தருகிறது, மேலும் விடுதலை மற்றும் ஞானமடைதலை நோக்கி நம்மை இயக்கும் காரணிகளில் ஒன்றும் ஆகும்.

அறிமுகம்

ஆறு தொலைதூர - அடைதல் அணுகுமுறைகளில் (பரிபூரணங்கள்) பொறுமை மூன்றாவதாகும், நாம் கோபமடையாமல் இருக்கும் ஒரு மனநிலை, ஆனால் அதற்கு பதிலாக பல்வேறு கஷ்டங்கள் மற்றும் துன்பத்தை சகித்துக் கொள்பவராக இருத்தல். மற்றவர்களிடம் இருந்து எல்லா வகையான தீங்குகளையும் நாம் சந்திக்க நேரிடலாம், ஆனால் அது நம்மைத் தொந்தரவு செய்யாது. நமக்கு எதிரிளோ அல்லது நம்மை காயப்படுத்த முயற்சிப்பவர்களோ இல்லை என்பதல்ல இதன் அர்த்தம், மாறாக நாம் கோபம், வெறுப்பு, ஊக்கமின்மை, அவர்களுக்கு உதவ தயக்கம் இல்லாதவராக இருத்தல் என்று பொருள். நாம் எப்போதும் நம்முடைய நிதானத்தை இழந்து கொண்டிருந்தால், உண்மையில் எப்படி மற்றவர்களுக்கு உதவ முடியும்? இந்த மனோபாவத்தில் மூன்று வகையான பொறுமைகள் உள்ளன:

தீங்கு ஏற்படுத்துபவரிடம் வருத்தப்படாமல் இருத்தல்

பொறுமையின் முதலாவது வகையானது தீங்கு ஏற்படுத்துபவரிடம் கோபமோ அல்லது வருத்தமோ அடையாமல் இருத்தல். இது எதிர்மறையாகச் செயல்படுபவர்களைப் பற்றியது மட்டுமல்ல, உண்மையில் உடல் மற்றும் மன ரீதியில் நம்மை மோசமாக நடத்துபவர்கள், நமக்கு தீங்கு விளைவிப்பவர்களும் கூட. நன்றியை வெளிப்படுத்தாத அல்லது நம்மை பாராட்டாதவர்களையும் கூட உள்ளடக்கியதே இந்தச் செயல். குறிப்பாக நாம் மற்றவர்களுக்கு உதவும் போது, அவர்கள் நம்முடைய அறிவுரையை ஏற்காவிட்டாலோ அல்லது அது செயல்படாவிட்டாலோ அவர்களிடம் கோபமடையாமல் இருத்தல் முக்கியமானதாகும். உதவுவதற்கு மிகவும் கடினமாக உள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், எனவே பொறுமையை இழப்பதற்குப் பதிலாக, அதில் உள்ள அனைத்து சிரமங்களையும் நாம் தாங்கிக் கொள்ள வேண்டும்.

நாம் குருகளாக இருந்தால், அவர்கள் எவ்வளவு மந்தமானவர்கள் அல்லது குறைவான அறிவாற்றல் உள்ளவர்களாக இருந்தாலும் நம்முடைய மாணவர்களிடம் எப்போதும் பொறுமை இழக்கக் கூடாது. ஒரு ஆசிரியராகிய நாம், தர்மத்தைப் போதிக்கின்றோமோ அல்லது வேறு ஏதாவது கற்பிக்கிறோமோ, விரக்திக்கு ஆளாகாமல் பொறுமையாக இருப்பது நம் கையில் உள்ளது. இது ஒரு குழந்தைக்கு கற்பிப்பது போன்றது: நாம் திறமையாக இருக்க வேண்டும்; ஒரு குழந்தை பெரியவரைப் போல விரைவாகக் கற்றுக் கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது.

துன்பத்தை சகித்தல்

இரண்டாவது வகையான பொறுமை என்பது நம்முடைய சுய துன்பத்தை ஏற்று சகித்துக் கொள்ளுதல், அதைப் பற்றி சாந்திதேவா அதிகம் பேசி இருக்கிறார். நாம் ஒரு பிரச்னையில் சிக்கிக்கொண்டால் அதற்கு தீர்வு காண முடியும், கோபப்படுவதிலோ, வருந்துவதிலோ அல்லது சோர்வடைவதிலோ எந்தப் பயனும் இல்லை. பிரச்னைக்கு என்ன தீர்வோ அதைச் செய்ய வேண்டும். மாறாக, அந்தச் சூழ்நிலையில் எதுவும் செய்ய முடியவில்லை என்றால், எதற்காக கோபப்படுகிறீர்கள்? அது எந்த வகையிலம் உதவாத. குளிராக இருந்தால் வெப்பமான ஆடைகளை அணிந்து கொள்வதைப் போன்றது தான் அது. உடலைச் சுற்றி பல அடுக்கு வெப்பமாக்கம் ஆடைகளை அணிய முடியும் என்றால், குளிராக இருக்கிறது என்று சொல்வதாலோ கோபம் அடைவதாலோ என்ன பயன்? நம்மிடம் வெப்பம் தரம் ஆடைகள் இல்லாவிட்டால், கோபமடைவதோ அல்லது வருந்துவதோ நம்மை வெப்பமாக வைக்காது இல்லையா. 

எதிர்மறை தடைகளை எரிக்கும் நம்முடைய அனுபவத்தை கூட நம்மால் காண முடியும், எதிர்மறை கர்ம வினையானது எதிர்காலத்தில் இன்னும் மோசமாகும் வரை தொடராமல் இப்போதே நடக்கிறதே என்று மகிழ்ச்சியடைவீர்கள். அதாவது ஒரு வகையில் லேசாக இறங்கி வருகிறோம். இப்படி வைத்துக் கொள்வோம் ஒரு மேசையில் மோதி பாதத்தில் அடிபட்டுவிடுகிறது - உண்மையில் அது வலித்தாலும் நாம் காலை உடைத்துக்கொள்ளாத நிலையில் அது நல்லதே! இப்படி சிந்திப்பது நாம் கோபமடையாமல் இருக்க உதவுகிறது. இதற்குப் பதிலாக காலில் அடிபட்டு விட்டது என்று மேலும் கீழும் குதித்து பெரிய சங்கடத்தை ஏற்படுத்துவது சின்னதாகக் கூட உதவப் போவதில்லை. அம்மா வந்து ஒரு முத்தமிட்டதலும் கூட அது நம்முடைய எல்லா வலியையும் சரி செய்து விட முடியாது!

ஒரு நீண்ட பின்வாங்கலைத் தொடங்குவது, மற்றவர்களுக்கு உதவ ஒரு பயணத்தை மேற்கொள்வது அல்லது சில தர்ம திட்டங்களில் பணிபுரிவது போன்ற மிகவும் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான வேலையைச் செய்ய முயற்சிக்கும்போது மற்றொரு விஷயம் பொருந்தும். தொடக்கத்தில் நிறைய தடைகள் மற்றும் கஷ்டங்கள் இருந்தால், பின்னர் அது உண்மையில் சிறந்தது. இது தடைகள் அனைத்தும் எரிந்து போவதைப் போல் உள்ளது, இதனால் மீதமுள்ள முயற்சிகள் நன்றாக நடக்கும். பிற்காலத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்குவதை விட, இப்போது எரிந்து கொண்டிருப்பதில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

துன்பம் மற்றும் பிரச்னைகள் நற்குணங்களையும் கூட கொண்டிருக்கிறது என்று சாந்திதேவா கூறுகிறார். நாம் வெளியே சென்று நம்மைச் சித்திரவதை செய்வதற்கான பிரச்சனைகளைத் தீவிரமாகத் தேட வேண்டும் என்பதல்ல, ஆனால் நாம் துன்பப்படும்போது, நாம் பாராட்டக்கூடிய பல்வேறு நல்ல குணங்கள் உள்ளன. துன்பம் நம் அகந்தையைக் குறைத்து நம்மை சாந்தப்படுத்துகிறது. இதே போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மற்றவர்களிடம் இரக்கத்தை வளர்த்துக் கொள்ளவும் இது அனுமதிக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டால், சக பாதிக்கப்பட்டவர்களிடம் இயல்பான பாராட்டும் கருணையும் கொண்டிருப்பது போன்றதாகும். நமக்கு வயதாகும்போது, முதுமையின் வலியை இறுதியாக புரிந்து கொள்ள முடியும். நமக்கு 16 வயதாக இருக்கும் போது பொதுவாக முதியவர்களிடம் கருணை காட்டுவதில்லை, ஏனென்றால் 70 வயதாக இருந்தால் என்ன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் நாம் முதுமை அடைந்து அவற்றையெல்லாம் அனுபவிக்கும் போது, நம்மிடம் வயதானவர்களுக்கான மிகுந்த இரக்கம் மற்றும் புரிதல் இருக்கும். 

அதே போன்று, நடத்தைக்கான காரணம் மற்றும் விளைவு - கர்மா - பற்றி நமக்கு ஓரளவு புரிதல் இருந்தால், நாம் பாதிக்கப்படும்போது, அழிவுகரமான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை அது நினைவூட்டுகிறது. ஏன்? ஏனெனில் எதிர்மறையாக செயல்படுவதே துன்பத்திற்குக் காரணம். மகிழ்ச்சிக்குக் காரணமான ஆக்கபூர்வமான செயல்களில் மிகவும் வலுவாக ஈடுபட இது நம்மை ஊக்குவிக்கும்.

தர்மத்திற்காக கஷ்டங்களை சகித்தல்

மூன்றாவது வகை பொறுமையானது, தர்மத்தைப் படிப்பதிலும், கடைப்பிடிப்பதிலும் உள்ள கஷ்டங்களை சகித்துக் கொள்ளுதலாகும். ஞானம் அடைவதற்கு மிகப்பெரிய உழைப்பும் முயற்சியும் தேவைப்படும், மேலும் சோர்வடையாமல் இருக்க இதனைப் பற்றி நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும்: நமக்கு நாமே பொறுமையாக இருக்க வேண்டும்.

சம்சாரியத்தின் இயல்பைப் புரிந்துகொள்வதும் ஏற்றுக்கொள்வதும் முக்கியம், அதன் உயர்வு மற்றும் தாழ்வு என்பது மறுபிறப்புகளின் அடிப்படையில் மட்டுமல்ல, ஆனால் பொதுவாக, எல்லா நேரத்திலும். சில சமயங்களில் நாம் பயிற்சி செய்ய விரும்புவோம், சில சமயங்களில் விரும்புவதில்லை. வேறு என் நாம் எதிர்பார்க்க முடியும்? எல்லாவற்றிற்கும் மேலாக அது சம்சாரியம். ஒவ்வொரு நாளும் அது சிறப்பாக சென்று கொண்டே இருக்காது, அதனால் ஒரு நாள் நாம் திட்டமிட்டபடி செல்லாவிட்டால் மனம் தளர்ந்து விடாமல் நாம் பொறுமையாக இருக்க வேண்டும்.  ஒருவேளை நாம் ஏற்கனவே கோபத்தை சமாளித்துவிட்டோம், இனி ஒருபோதும் கோபப்பட மாட்டோம் என்று நினைக்கலாம், ஆனால் திடீரென்று ஏதோ நடக்கிறது மற்றும் நாம் கோபத்தை இழக்கிறோம். ஆம், அது நடக்கும். அர்ஹதராக விடுதலை பெறும் வரை நாம் கோபத்திலிருந்து முற்றிலும் விடுபட மாட்டோம். எனவே, பொறுமையே முக்கியமான திறவுகோல் ஆகும்.

பொறுமையை மேம்படுத்துவது பற்றி சாந்திதேவா சொன்னவை

போதிசத்வ நடத்தையில் ஈடுபடுதல் நூலில் பொறுமையை வளர்ப்பதற்கான பல வழிகளை சாந்திதேவா விளக்குகிறார். சில உதாரணங்களை இங்கே பார்க்கலாம்:

நாம் நம்முடைய கையை சுட்டுக்கொண்டாலோ அல்லது ஸ்டவ் மீது கையை வைத்துக் கொண்டாலோ, நெருப்பு ஏன் சுடாக இருக்கிறது என்று அதன் மீது கோபமடைய மாட்டோம். சுடுவது நெருப்பின் இயல்பு. அதே போன்று தான், சம்சாரியத்தில் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்? நிச்சயமாக, மற்றவர்கள் நம்மை தாழ்வாக்கப் போகிறார்கள், நம்மை காயப்படுத்தப் போகிறார்கள், விஷயங்கள் கஷ்டமாக இருக்கப் போகிறது. நமக்காக எதாவது செய்ய வேண்டும் என்று யாரிடமாவது கேட்டால், அவர்கள் சரியாக செய்ய வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். நாம் விரும்பும் விதத்தில் அவர்கள் செய்யாவிட்டால், அது யாருடைய தவறு? சோம்பேறித்தனத்தால் அதை நாமே செய்யாமல் மற்றவர்களை செய்ய கேட்டது நம்முடைய சொந்த தவறு.  யார் மீதாவது கோபப்பட வேண்டுமெனில், நாம் நம்முடைய சொந்த சோம்பேறித்தனத்தின் மீது தான் கோபப்பட வேண்டும். 

"சம்சாரியத்தில் இருந்து நாம் என்ன எதிர்பார்க்கலாம்" என்பது, நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய பல்வேறு வகையான பொறுமைகளை நினைவில் வைத்துக் கொள்ள உதவும் ஒரு சொற்றொடர். வாழ்க்கை சுலபமாக இருக்கும் என்றும், எல்லாமே எப்போதும், என்றும் சிறப்பாகச் செயல்படும் என்று நாம் நினைக்கிறோமா? நம் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தின் இயல்பும் சம்சாரியம் - அது கட்டுப்பாடில்லாமல் மீண்டும் வரும் துன்பங்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு சமம். எனவே, நாம் விரும்பியபடி விஷயங்கள் செயல்படாதபோது அல்லது மக்கள் நம்மை காயப்படுத்தும்போது அல்லது ஏமாற்றமடையும்போது, ஆச்சரியப்பட வேண்டாம். நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அதனால்தான் நாங்கள் அதிலிருந்து வெளியேற விரும்புகிறோம்.

இது எப்படி இருக்கிறதென்றால் பனிக்காலம் மிகவும் குளிராகவும் இருளாகவும் இருக்கிறது என்று புகார் செய்வதைப் போன்றதாகும். பனிக்காலத்திட்ம் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும் - நாம் சூரியக் குளியல் எடுக்கும் விதமாக அது மிக அருமையாக இதமாக இருக்குமா?! நெருப்பின் இயல்பு சுடுவது, அதில் கையை விட்டால் நம்முடைய கை எரிச்சலடையும், அதே போன்று குளிர்காலம் என்பது குளிராகவும் இருளாகவும் இருக்கும். இதனால் கோபமடைவதில் எந்தப் பயனும் இல்லை.  

சாந்திதேவா பரிந்துரைக்கும் மற்றொரு முறை, மற்றவர்களை பைத்தியக்காரர்கள் அல்லது குழந்தைகளைப் போல பார்ப்பது. ஒரு பைத்தியக்காரன் அல்லது குடிகாரன் நம்மைப் பார்த்துக் கத்தினால், நாம் திருப்பிக் கத்துவது கைத்தியக்காரத் தனமாக, இல்லையா? நம்முடைய இரண்டு வயது குழந்தை, தொலைக்காட்சி பார்க்கும் போது நிறுத்திவிட்டு தூங்க சொல்லும் போது அந்தக் குழந்தை "நான் உன்னை வெறுக்கிறேன்!" என்று கத்தினால், நாம் அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு கோபப்பட்டு நம்முடைய குழந்தை நம்மை வெறுக்கிறது என்று வருத்தப்படுவோமா? இல்லை, ஏனெனில் அது ஒரு குழந்தை. கொடூரமாக நடந்துகொள்ளும் மற்றவர்களை அவர்களை ஒரு வெறித்தனமான குழந்தை அல்லது பைத்தியம் பிடித்தவர் போல் பார்க்க முடிந்தால், அது உண்மையில் அவர்களுடன் கோபப்படாமல் இருக்க உதவுகிறது.

கூடுதலாக, யாரேனும் நமக்கு மோசமான நேரத்தை கொடுத்தால், அவர்களை நம்முடைய குருவாகப் பார்ப்பது மிகவும் உதவிகரமாக இருக்கும். உச்சபட்சமாக கத்தும் ஒரு நபரை நாம் எப்போதும் பார்த்திருப்போம் நம்மால் அவரை எப்போதும் தவிர்க்க முடியாது, இல்லையா? நாம் அவர்களுடன் இருந்தால், "இவர் என்னுடைய பொறுமையின் குரு" என்று நாம் நினைக்கலாம். உண்மையில் யாரும் நம்மிடம் கத்தவில்லை கடினமான நேரத்தை கொடுக்கவில்லையெனில், நம்மால் பொறுமையை எப்போதுமே கற்றுக் கொள்ள முடியாது. நாம் ஒருபோதும் சவாலுக்கு ஆளாக மாட்டோம், எனவே இந்த வகையான வாய்ப்புகளை வழங்குவதில் இவர்கள் மிகவும் அன்பானவர்கள் என்பதை நாம் காணலாம். புனிதர் தலாய் லாமா சீனத் தலைவர்கள் தனது ஆசிரியர்கள் என்றும், மாவோ சேதுங் தனது பொறுமையின் சிறந்த ஆசிரியர் என்றும் எப்போதும் கூறுகிறார்.

சுருக்கம்

சம்சாரியத்தில் சிக்குண்டு இருக்கும் ஒவ்வொரு நாளும் நாம் பிரச்னைகள் மற்றும் வெறுப்பை எதிர்கொள்கிறோம். சில நேரங்களில் விஷயங்கள் நாம் விரும்பும் வழியில் செல்கிறது, சில நேரங்களில் வாழ்க்கையானது கட்டுப்பாட்டு வளையத்திற்கு வெளியே சென்றுவிடுகிறது. நாம் செய்யும் ஒவ்வொன்றும் தவறாகப் போவதற்கான திறன் இருக்கிறது, நம்முடைய நண்பர்கள் ஒவ்வொருவரம் எதிரியாகும் வாய்ப்பு இருக்கிறது. நம்முடைய நெருங்கிய நண்பருக்கு நாம் எவ்வளவு உதவி செய்திருக்கிறோம் என்பது பெரிதல்ல, அவர்கள் நம் முதுகிற்குப் பின்னால் பேசும் விஷயங்களைக் கேட்டு பிரமித்துப் போய்விடுவோம். 

இது போன்ற சூழ்நிலைகளில், கோபமடைவது இயல்பு, அந்தக் கோபமே நம்முடைய எதிரியை அழித்தால், நாம் மனநிம்மதி அடைவோம் என்ற ஆசையை இயக்கம் நம்பிக்கையாகிறது. துரதிஷ்டவசமாக, நாம் இன்று, நாளை, நாளை மறுதினம் என்று நம்முடைய பரம எதிரியை அழித்தாலும் கூட, புதிதாக ஒன்று முளைத்துக் கொண்டு தான் இருக்கும். மொத்த கிரகத்திற்கும் தோள் போர்த்துவதைவிட நம்முடைய சொந்த காலுக்கு தோள் போர்த்துவது எளிது என்று சாந்திதேவா அறிவுறுத்துகிறார். மற்றொருவிதமாகச் சொல்வதானால், நம்முடைய வெளித்தோற்ற எதிரிகளை வெல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை, நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்முடைய சொந்த உள்ளார்ந்த எதிரியான கோபத்தை அழிக்க வேண்டும். இங்கே நாம் போர்த்திக் கொள்ள வேண்டிய தோள் என்று குறிப்பிடுவது பொறுமையை, பிறர் நம்மீது சுமத்தும் துன்பங்களைத் தாங்கி, விடுதலைக்கான பாதையில் நாம் சந்திப்போம் என்று நம்மை அழைத்துச் செல்லும் நுழைவாயில் ஆகும்.

Top