உந்துதலின் இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைகள்

மறு ஆய்வு

ஆன்மிகப்பாதைக்கான மேம்படுத்தப்பட்ட நிலைகள் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம், அங்கே நாம் நமது உந்துதலை சிறிய நம்பிக்கையில் இருந்து அது நிறைவுபெறும் வரையில் அடிப்படையில் அகலப்படுத்தவும் விரிவுபடுத்தவும் முயற்சிக்கிறோம். இவ்வழியில் ஒவ்வொரு நிலையும் முந்தைய நிலைகளின் மீது கட்டமைக்கப்படுகிறது.

இந்த வளர்ச்சியின் மூலம் செல்வதற்கு இரண்டு வழிகள் இருப்பதையும் நாம் பார்த்தோம். இந்த வாழ்நாளை சிறப்பாகவும் நம்முடைய வாழ்க்கையை சிறிதேனும் நல்லதாக்குவதற்குமான அக்கறையுடன் நாம் தர்மா – லைட் பதிப்பை பின்பற்றலாம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, நாம் தொடங்க வேண்டிய நிலை இது தான். இருப்பினும், பாரம்பரிய வழங்கல் இந்த நிலையை கருத்தில் கொள்ளாது, ஏனெனில் மறுபிறப்பு தொடக்கம் மற்றும் முடிவில்லாத நம்பிக்கை என்று கருதப்படுகிறது. உண்மையான தர்மப் பொருள், என்பது உண்மையான கோக-கோலாவைப் போல, மறுபிறப்பு சூழலை வளர்ச்சியுடன் பேசுகிறது.     

தொடக்க நிலை உந்துதல், அனைத்து உந்துதல் நிலைகளைப் போலவே, ஒரு நோக்கத்தைக் கொண்டது, அந்த நோக்கத்தை அடைவதற்கான காரணம் மற்றும் அதற்குப் பின்னால் இருக்கும் உணர்வு இலக்கை அடைவதற்காக நம்மை இழுத்துச் செல்வதை நாம் காண்கிறோம். தொடக்க நிலையில், நாம் நம்முடைய எதிர்காலத்தை மேம்படுத்துவதற்குப் பார்ப்போம், விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பை தொடர்ந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவோம் அப்போது தான் நம்மை நாமே முன்னேற்றிக் கொண்டு மிகப்பெரிய இலக்குகளை அடைய முடியும். இந்த வாழ்நாளிலேயே இறுதி இலக்கை அடைவதென்பது கடினம் என்பதை நாம் உணர்கிறோம். இலக்கை அடைய காலங்கள் பலவும் நிறைய கடின உழைப்பும் தேவை. முயற்சிப்பதற்கான காரணமும் தொடர்ந்து சிறப்பான மறுபிறப்புகளை கொண்டிருந்தால் நம்மால் அந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியும். 

ஒரு விலைமதிப்பில்லாத மனித மறுபிறப்பின் இலக்கை நாம் அடையும் போது அதைத்தான் செய்ய வேண்டும் என்று நாங்கள் திட்டமிடுகிறோம். நம்முடைய அடுத்த ஜென்மத்தில் சொர்க்கத்திற்குச் சென்று நல்ல நேரத்தை கொண்டிருப்பதைப் பற்றி நாங்க் பேசவில்லை. இந்த எல்லைக்குள், சிறந்த மறுபிறப்பைத் தேட நம்மைத் தூண்டும் உணர்ச்சி மோசமான மறுபிறப்பைப் பெறுவதற்கான அச்சமாகும். இந்த மோசமான நிலைகளுடன் நம்மை நாமே முன்னேற்றவும் செயல்படுத்தவும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும். ஆனால், இதனை தவிர்ப்பதற்கு ஒரு வழி இருக்கிறது என்ற நம்பிக்கை நம்மிடம் இருக்கிறது. நாம் இதனை பாதுகாப்பான திசை, அல்லது அடைக்கலம் என்ற தலைப்பில் ஆலோசித்திருக்கிறோம். இந்த திசையானது அடிப்படையில் முயற்சிக்கவும், நம்முடைய மனநிலையை ஆட்கொள்ளும் எதிர்மறை விஷயங்கள் குறிப்பாக நம்முடைய நடத்தை மற்றும் அனைத்து அளவீடுகளையும் எப்போதைக்கும் முழுவதும் நிறுத்தி வைக்கும். இதனோடு, நாம் ஆக்கப்பூர்வமான வழியில் செயல்பட விரும்புகிறோம். நாம் இதனை விலைமதிப்பில்லாத மனித வாழ்க்கையைக் கொண்டிருக்கிறோம் என்ற சூழலுக்குள் இருக்கும் வாய்ப்புகளைப் போற்றுவதோடு, இறக்கும் நேரத்தில் இவற்றை நாம் நிச்சயமாக இழக்கப் போகிறோம் என்ற புரிதலுடன் செயல்படுத்தலாம். மரணம் நிச்சயம் வரப்போகிறது ஆனால் அது எப்போது நிகழும் என்று நமக்குத் தெரியாது. 

Top