வெறுமை என்றால் என்ன?

வெறுமை, அல்லது வெற்றிடம் என்பதன் பொருள் "ஒன்றுமில்லாதது" அல்ல. ஒன்றும் இல்லாததால் உங்களுடைய அனைத்து பிரச்னைகளையும் மறந்து விடுங்கள் என்றும் அர்த்தமல்ல, ஏனெனில் அவை அப்படி இருப்பதில்லை. வெற்றிடத்தின் பொருள் முழுவதும் இல்லாமை, சாத்தியமில்லாத வழிகளில் இருப்பதற்கான இல்லாமையாகும். நாம் முன்நிறுத்துகின்ற கற்பனைகள் இருக்கின்ற அனைத்தும் எப்படி யதார்த்தத்திற்கு ஒத்துப்போவதில்லை என்பதைப் பற்றியது. நம் பிரச்சனைகள் உட்பட, விஷயங்களின் பக்கத்தில் உள்ள எதுவும், அதன் சொந்த சக்தியால் அவற்றை ஒரு பிரச்சனையாக்குவதில்லை. வழக்கமாக, அவை கவனிக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாக இருக்கலாம், ஆனால் வரையறுக்கப்படும் வார்த்தையான "சிக்கல்" என்பதன் அடிப்படையில் மட்டுமே அவை ஒரு பிரச்சனையாக இருக்க முடியும்.

வெற்றிடம் (சமஸ்கிருதத்தில் சூன்யதா) பெரும்பாலும் ஆங்கிலத்தில் "வெற்றிடம்" என்று அறியப்படுகிறது, புத்தரின் உள்ளுணர்வுகளில் முக்கியமான ஒன்று. ஒருவரின் வாழ்வில் ஆழமான பிரச்னைக்கான ஆதாரம் அவர்கள், மற்றவர்கள் மற்றும் அனைத்தும் எப்படி இருக்கின்றன என்ற குழப்பத்தைப் பற்றியதே என்பதை புத்தர் உணர்ந்தார். அவர்களின் மனங்கள் சாத்தியமில்லாத வழியில் இருப்பதை ஒவ்வொன்றிலும் முன்நிறுத்துகிறது. அவர்கள் என்ன முன்நிறுத்துகிறார்களோ அவை யதார்த்தத்திற்கு ஒத்துவராது என்ற விழிப்புணர்வின்மையால் மக்கள் பிரச்னைகளை தாங்களாகவே உருவாக்கி அறியாமையால் துன்பத்தை தேடிக்கொள்கின்றனர். உதாரணமாக, நம்மை நாமே தோற்றவர்களாக முன்னிறுத்தினால், நாம் என்ன செய்தாலும் எப்போதும் வாழ்வில் வெற்றிபெறமுடியாது, இதனால் நாம் மன அழுத்தத்திற்கு ஆளாவதோடு மட்டுமின்றி சுய-மதிப்பையும் குறைத்துக் கொள்வோம், ஆனால் தன்-நம்பிக்கையை இழப்பதனால், நம்மை நாமே அதிகம் மேம்படுத்திக் கொள்வதற்கான முயற்சியை கூட கைவிட்டுவிடுவோம். வாழ்க்கையில் ஒரு கீழ்த்தரமான நிலைக்கு நம்மை நாமே கீழ் இறக்குகிறோம்.  

வெற்றிடம் என்பதன் பொருள் முழுமையான இல்லாமை, உள்ளுணர்வில் நாம் என்ன முன்நிறுத்துகிறோம் அதற்கு ஒத்துபோகின்ற உண்மையான இருத்தலுக்கான வழி இல்லாமை. நாம் கட்டாயமான அவற்றை முன்நிறுத்துகிறோம் ஏனெனில் நம்முடைய கற்பனைகள் அனைத்தும் யதார்த்தம் என்று நம்பும் பழக்கம் நம்முள் வேரூன்றி இருக்கிறது. உதாரணமாக, "தோற்றவர்" என்பது வெறும் வார்த்தை மற்றும் கருத்து. நம்மை நாமே "தோல்வியாளர்" என்று முத்திரை குத்திக்கொண்டு "தோல்வியாளர்" என்ற வார்த்தையையோ அல்லது பெயரை நமக்கு நாமே சூட்டிக்கொண்டு இருக்கிறோம், இவை அனைத்தும் வழக்கமானவைகளே என்பதை நாம் உணர வேண்டும். நம்முடைய வாழ்வில் நாம் பல முறை தோற்றிருக்கிறோம் என்பது துல்லியமாக இருக்கலாம், அல்லது உண்மையில் நாம் தோற்றுப்போகாமல் இருந்திருக்கலாம், மாறாக சரியாக இல்லாததால் இவை தோல்வி என்று நாம் உணரலாம் ஏனில் நாம் போதுமான சிறந்தவராக இல்லை. இல்லையெனில், நம்முடைய வாழ்வின் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்ட ஏராளமான விஷயங்கள் நடந்திருக்கலாம். ஆனால் நம்மை நாமே தோல்வியாளர் என்று முத்திரைபடுத்திக் கொள்வதனால், மன ரீதியில் நம்மை நாமே "தோல்வியாளர்கள்" என்ற பெட்டிக்குள் அடைத்து வைத்துக்கொண்டு அந்த பெட்டிக்குள் யாரோ ஒருவர் உண்மையில் இருப்பதாக நம்புகிறோம். உண்மையில், நம்மைப் பற்றி இயல்பாகவே ஏதோ தவறு அல்லது கெட்டது இருப்பதாக நாம் கற்பனை செய்கிறோம், அது நிச்சயமாக இந்த பெட்டியில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. நம் வாழ்வில் நாம் செய்த அல்லது வேறு யாரேனும் என்ன நினைக்கிறார்களோ அதைச் சார்ந்து இல்லாமல், அதன் சொந்த சக்தியால் இந்த பெட்டியில் இருப்பதை இது நிறுவுகிறது.

யாரோ ஒருவர் இந்த தோற்றவர்கள் பெட்டிக்குள் சிக்கிக்கொண்டு இந்த வகையில் இருப்பது மேலும் அதுவே சரியான இடம் என்று நினைப்பது முற்றிலும் கற்பனையானது. இது யதார்த்தம் சார்ந்த எதற்கும் ஒத்துப்போகாது. பெட்டிக்குள் சிக்கிக்கொண்டது போல யாராலும் இருக்க முடியாது. தோல்வியாளர் இருக்கிறோம் என்ற எழுதல் கருத்தை சார்ந்தே எழுகிறது. மேலும் அந்தப் பெயரை நமக்கு நாமே பொருத்திக்கொள்கிறோம். "தோல்வியாளர்" என்ற ஒரு கருத்தும் "தோல்வியாளர்" என்ற வார்த்தையும் வழக்கமானதைப் போன்றதே. அது யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தலாம், உதாரணமாக சீட்டு விளையாட்டில் அவர்கள் தோற்றால், அந்தச் சூழலில், அவர்கள் தோல்வியாளர்கள்.ஆனால் தோற்றுப்போனவர் என்று யாரும் இயல்பாக இல்லை, வெற்றி என்பது யாருக்கும் எப்போதும் சாத்தியமில்லை, ஏனென்றால் அவர்கள் உண்மையிலேயே தோல்வியடைந்தவர்கள். 

உண்மையிலேயே தோல்வியாளராக இருத்தலின் வெற்றிடத்தை நாம் உணர்ந்தால், அதில் வழியில் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அது யதார்த்தத்திற்கு ஒத்துப் போகாது. உண்மையில் நாம் ஒரு தோல்வியாளர் என்ற உணர்வு கருத்து மற்றும் "தோற்றவர்" என்ற வார்த்தைக்கு மட்டுமே பொருந்தும் சில சமயங்களில் நாம் தோற்றுப் போவதனால் நமக்க நாமே இதனை பொருத்திக் கொள்கிறோம். ஆனால், அதன் சொந்த சக்தியால் நம்மை நிரந்தரமாக தோல்வியாளராக எதுவும் இல்லாதவராக மாற்றுவதில் நம்மில் உள்ளார்ந்த தவறு எதுவும் இல்லை. அப்படியென்றால், வெற்றிடமானது, தற்போதுள்ள இந்த சாத்தியமற்ற வழியின் மொத்த இல்லாமை. கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் அப்படி யாரும் இருக்க முடியாது.

நமது கற்பனைகளை மறுகட்டமைப்பதற்கும் அவற்றை நம்புவதை நிறுத்துவதற்கும் முன் வெற்றிடத்தைநாம் நன்கு பரிட்சயப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் வெற்றிடத்தை தியானிப்பதில் நாம் விடாமுயற்சியுடன் செயல்பட்டால், படிப்படியாக, பழக்கத்திற்கு மாறாக, நம்மை நாமே தோல்வியுற்றவர் என்று முத்திரை குத்திக்கொள்ளும்போது, இது முட்டாள்தனம் என்பதை உணர்ந்து, நம் கற்பனையை அகற்றுவோம். இறுதியில், இந்த பழக்கத்தை நாம் முறித்துக் கொள்ளலாம், மேலும் ஒருபோதும் நம்மை ஒரு தோல்வியுற்றவராக நினைக்க மாட்டோம்.

சுருக்கம்

சாத்தியமற்ற வழிகளில் எதுவும் நிலைப்பதில்லை என்பதால் எதுவும் நிலையானது இல்லை என்று அர்த்தமல்ல. சுயமாக நிறுவப்பட்ட உள்ளார்ந்த இருப்பு போன்ற ஏற்கனவே உள்ள சாத்தியமற்ற வழிகளை வெற்றிடம் மறுக்கிறது. வார்த்தைகள் மற்றும் கருத்துகளின் மரபுகளுக்கு ஏற்ப, "இது" அல்லது "அது" என விஷயங்கள் இருப்பதை இது மறுக்கவில்லை.

Top