விவாதித்தலின்நோக்கம் மற்றும் பலன்கள்

02:03
பௌத்தத்தில் விவாதம் என்பது எதிராளியை தனது புத்திசாலித்தன தர்க்கத்தால் வீழ்த்துவதல்ல. மாணவர்கள் தங்களது புரிதலின் உறுதிப்பாட்டை மேம்படுத்திக்கொள்ள உதவுவது, எனவே அவர்களுக்கு தியானம் குறித்த சந்தேகங்கள் இருக்காது. வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவரும் சக வகுப்பு தோழருக்கு கேள்விகளை எழுப்புவதன் மூலமும், அவர்களின் பதில்களில் ஏதேனும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டுவதன் மூலமும் தங்களது நிலையை பாதுகாக்க சவால் விடுகிறார்கள். இறுதியில், இரு தரப்பினரும் பயனடைகிறார்கள்.

பௌத்த பயிற்சியில் விவாதத்திற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்று தீர்மானமான விழிப்புணர்வை மேம்படுத்த உங்களுக்கு உதவுவதாகும். நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறீர்கள் உங்களுடன் எதிர் விவாதம் செய்பவர் அதை பல கோணங்களில் சவால் விட்டு எதிர்ப்பார். அவரது எல்லா ஆட்சேபனைகளுக்கும் எதிராக நீங்கள் நிலைப்பாட்டைப் பாதுகாக்க முடியும் மற்றும் அதற்கு தர்க்கரீதியான முரண்பாடுகள் இல்லை என்பதை நீங்கள் கண்டால், நீங்கள் அந்த நிலையில் கவனம் செலுத்தலாம் அல்லது அசைக்க முடியாத முற்றிலும் தீர்க்கமான விழிப்புணர்வுடன் பார்வையிடலாம். இந்த மனநிலையை உறுதியான நம்பிக்கை என்றும் கூட நாம் அழைக்கலாம். நிலையாமை, நம்மிடமும் மற்றவர்களிடமும் சமநிலை, நம்மைவிட மற்றவர்கள் உயர்ந்தவர்கள் என்று கருதுதல், போதிசிட்டா, வெற்றிடம் உள்ளிட்ட எந்த ஒரு தலைப்பிலும் தியானிக்கும் போது உங்களுக்கு நம்பக்கூடிய விழிப்புணர்வு மற்றும் உறுதியான பற்றுக்கோள் இருத்தல் அவசியம். அந்த நம்பத்தக்க விழிப்புணர்வை பகுப்பாய்வு தியானம் அல்லது தர்மம் குறித்து சிந்தித்தல் உள்ளிட்டவை மூலமாக நீங்களே மேம்படுத்த முயற்சித்தால், பரந்த ஞானத்துடன் தகவல்கள் பலவற்றை அறிந்த பங்குதாரர் உங்களுடன் விவாதித்தால் நீங்கள் கொண்டிருக்கும் பல விதமான ஆட்சேபனைகளுடன் கூடிய புரிதலைக் கொண்டு ஒரு போதும் கேள்வி எழுப்ப முடியாது. நீங்கள் எப்போதும் செய்வதை விட மிக எளிதாக உங்களது தர்க்கத்தில்  இருக்கும் முரண்பாடுகள் அல்லது தவறுகளை மற்றவர்கள் கண்டறியக் கூடும்.

மேலும், விவாதித்தல் என்பது ஒருமுகப்படுத்தலை மேம்படுத்த விரும்பும் தொடக்க நிலையாளர்களுக்கு தியானத்தை விட உகந்த சூழலைத் தருகிறது. விவாதத்தில் உங்களது பங்குதாரரின் சவால் மற்றும் வகுப்பு தோழர்களின் தாக்கத்தினால் கவனித்தல் திறன் உங்களை ஒருமுகப்படுத்தச் செய்கிறது. தனிமையில் தியானித்தல், மனஉறுதி மட்டுமே உங்களுக்கு மனம் அலைபாய்தல் அல்லது தூங்கிவிடாமல் இருக்கும் நிலையைக் கொடுக்கிறது. கூடுதலாக, துறவு பற்றிய விவாத களத்தில் பல விவாதங்கள் ஒருவருக்கொருவர் இடையில் மிகவும் சத்தமாக நடக்கிறது. இதுவும் கூடநீங்கள் ஒருமுகப்படுத்த அழுத்தம் தருகிறது. உங்களைச் சுற்றி நடக்கும் விவாதம் உங்களது கவனத்தை சிதறச் செய்தாலோ அல்லது உங்களை கத்தச் செய்தாலோ, நீங்கள் தோற்றுவிட்டீர்கள். விவாதக் களத்தில் நீங்கள் ஒருமுகப்படுத்தும் திறனை வளர்த்துக் கொண்டால், நீங்கள் அதனை தியானத்திற்கு செயல்படுத்தலாம், ஏனெனில் இதனால் நீங்கள் அதிக சத்தமான இடத்திலும் தியானிக்க முடியும்.

அதற்கும் மேல், விவாதமானது உங்களது ஆளுமையை மேம்படுத்தும். நீங்கள் தொடர்ந்து வெட்கப்படாமல் விவாதிப்பீர்கள். உங்களது எதிராளி சவால் விடும் போது நீங்கள் கட்டாயம் பேச வேண்டும். மற்றொரு புறம், நீங்கள் பிடிவாதமாகவோ அல்லது கோபமடைந்தாலோ, உங்களது மனம் தெளிவில்லாமலும் தவிர்க்க முடியாததாகிவிடும், உங்களது எதிர் விவாதம் செய்பவர் உங்களை தோற்கடித்துவிடுவார். எல்லா நேரங்களிலும், நீங்கள் உணர்வுகளின் சமநிலையை பாதுகாக்க வேண்டும். நீங்கள் வெற்றி பெறுகிறீர்களோ அல்லது தோல்வியடைகிறீர்களோ, விவாதம் உங்களுக்கு அருமையான வாய்ப்பான “நான்” என்ற மறுக்க வேண்டிய அடையாளத்தை காட்டுவதுதான். “நான் வென்றுவிட்டேன்; நான் மிகவும் அறிவாளி,” அல்லது “நான் தோற்றுவிட்டேன்; நான் மிக முட்டாள்,” என்று நீங்கள் சிந்தித்தாலோ அல்லது உணர்ந்தாலோ, நீங்கள் அடையாளம் காணும் ஒரு திடமான, சுய-முக்கியமான "என்னுடையது" என்ற முன்னெடுப்பை நீங்கள் தெளிவாக அடையாளம் காணலாம். "நான்" என்பது சுத்த கற்பனை மற்றும் மறுக்கப்பட வேண்டியது.

உங்கள் எதிர் விவாதப் பங்காளியின் நிலைப்பாடு நியாயமற்றது என்பதை நீங்கள் நிரூபித்தாலும் கூட, நீங்கள் புத்திசாலி என்பதையும் அவர் முட்டாள் என்பதையும் நிரூபிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தர்க்கரீதியாக நிரூபிக்கப்பட்டவற்றில் தெளிவான புரிதலையும் உறுதியான நம்பிக்கையையும் வளர்க்க உங்கள் பங்குதாரருக்கு உதவுவதாகவே உங்கள் உந்துதல் எப்போதும் இருக்க வேண்டும்.

Top