கடினமான உறவுமுறைகளை கையாளுதல்

நம்முடைய உறவுமுறையை மேம்படுத்த, நாம் நம்முடைய யதார்த்தமற்ற முன்னெடுப்புகளை புறந்தள்ள வேண்டும். அவையே கஷ்டங்களுக்குக் காரணம் மேலும் அக்கறையான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
Meditation difficult relationships nik shuliahin unsplash

விளக்கம்

பௌத்த தியானமானது பிரச்னைகளை வெல்வதை எதிர்நோக்கியது. இதனாலேயே புத்தர் நான்கு மேன்மையான உண்மைகளை நமக்கு கற்பித்தார். பிரச்னைகளை மேலும் சிறந்த வழியில் கையாள்வதற்கு அவை நமக்கு உதவும்.  நம் அனைவருக்குமே பிரச்னைகள் இருக்கிறது நம்முடைய வாழ்யில் அதனை சந்திக்கிறோம். சில மற்றவர்களை விட கடுமையானதாக இருக்கும். ஆனால் அவற்றில் ஒன்று நம்மில் பெரும்பாலானோர் சந்திப்பது மற்றவர்களுடன் நமது உறவுமுறைகளை தொடர்வதைப் பற்றியது. 

சில உறவுமுறைகள் சற்றே கடினமாகவும் சவாலானதாகவும் இருக்கும். ஆனால் அவற்றை சிறப்பாக கையாள்வதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை புத்தர் நமக்கு போதித்திருக்கிறார். இந்தப் பிரச்னைகளுக்கான காரணங்களை காண நமக்குள்ளேயே நம்மை காண வேண்டும்.  ஏனெனில் மற்றவர்கள் நம்முடைய பிரச்னைகளுக்கு எவ்வளவு உறுதியாக பங்களிப்பு ஆற்றுகிறார்களோ அதைவிட, நாமே கட்டுப்படுத்தக்கூடிய ஒரே விஷயம் என்றால் நமக்கு நாமே அந்த பிரச்னைக்கு எவ்வளவு பதில்கொடுக்கிறோம் என்பதே. அதாவது நம்முடைய நடத்தை மற்றும் அணுகுமுறைகள் இரண்டின் மூலமாக நாம் எவ்வாறு பதில்அளிக்கிறோம். 

நம்முடைய நடத்தையானது நம்முடைய அணுகுமுறையை வைத்து வடிவமைக்கப்பட்டாலும், நாம் நம்முடைய அணுகுமுறைகளை மேம்படுத்துவதற்கு முயற்சிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.  யதார்த்தம் மற்றும் இரக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சிக்கல் ஏற்படுத்துபவற்றை ஆரோக்கியமானதாக மாற்றினால், கடினமான உறவுகளிலிருந்து நாம் அனுபவிக்கும் துன்பங்களை முற்றிலுமாக அகற்றாவிட்டாலும், குறைக்கலாம்.

தியானம்

  • அமைதியாக அமர்ந்து சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள்.
  • உங்களுடன் கடினமான உறவுமுறையில் இருக்கும் யாரோ ஒருவரைப் பற்றி கவனம் செய்யுங்கள், உதாரணத்திற்கு முதல் மேன்மை தரும் உண்மை, உண்மையான துன்பங்கள்.
  • எரிச்சலூட்டும் உணர்வு எழட்டும்.
  • அவ்வாறு ஏன் உணர்கிறீர்கள் என்பதை ஆராயுங்கள் உதாரணத்திற்கு இரண்டாவது மேன்மை தரும் உண்மை, துன்பத்திற்கான உண்மையான காரணங்கள். அவ்வாறு அவற்றுடன் இருப்பது கடினமாக இருக்கலாம், அது நமக்கு கஷ்ட காலத்தையும் தரலாம், அல்லது அவை குறித்து நமக்கு ஏதேனும் விருப்பமின்மை இருக்கலாம், அல்லது நாம் இருக்க நினைக்கும் நேரத்தில் எப்போதும் அவை நம்முடன் இருக்காது அல்லது அவை எப்போதும் நல்ல மனநிலையில் இருக்காது. 
  • நாம் இன்னும் ஆழமாக சென்று பார்த்தால், நாம் அந்த கோணத்துடன் மட்டுமே அவர்களை அடையாளம் காண்பதை பார்க்க முடியும். அவர்களும் மனிதர்களே அவர்கள் வாழ்விலும் இதர பல உயிர்கள் இருக்கின்றன மேலும் நம்மைக்காட்டிலும் இதர விஷயங்களும் அவர்களை பாதிக்கிறது, நம்மைப்போலவே அவர்களுக்கும் உணர்வுகள் விருப்பங்கள் இருக்கின்றன, நம்மைப் போலவே தான் அவர்களும் என்பதை நாம் உண்மையில் பொருட்படுத்துவதில்லை.
  • எல்லோருமே அவர்களிடம் அந்த வழியில் அணுகுவதில்லை, எனவே அவர்களுடன் அந்த எரிச்சல் மற்றும் அசவுகரியமாக உணர்வுடன் முடிவுக்கு கொண்டு வருவது சாத்தியமே மூன்றாவது மேன்மையான உண்மை போல துன்பப்படுதலை நிறுத்தும் உண்மை.  
  • அந்த அசவுகரியத்தை வெளியேற்ற, நான்காவது மேன்மையான உண்மை மனதை சரியாக புரிந்து கொள்வதற்கான சரியான பாதை என்பதை நாம் உணர வேண்டும், உண்மையில் ஒரு எரிச்சலூட்டும் நபராக இருந்தால், அதன் பின்னர் அவருடைய பிறப்பில் இருந்து எல்லோருமே அவரை எரிசலூட்டுபவராகவே காண்பர். ஆனால் அது சாத்தியமில்லை.
  • உண்மையில் ஒரு எரிச்சலூட்டு நபர் என்ற  முன்எடுப்பை நாம் வெட்டி தூக்கி எறிவோம். 
  • பின்னர் நாம் அவரை எரிச்சலின்றி பார்ப்போம். அவை நமக்கு எரிச்சலூட்டுவதாக மட்டுமே தோன்றுகின்றன, ஆனால் அது ஒரு மாயை போன்றது. 
  • பிறகு அவர்களை நோக்கி அக்கறையான அணுகுமுறையை உருவாக்குவோம் – அவர்கள் மனிதர்களை விரும்புபவராகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டுபவர்கள், விரும்பப்படாமல் இருப்பதை வெறுப்பவர்கள். இந்த நபர் என்னை நோக்கி ஒரு கொசு போல ஒரு தொல்லை போல் செயல்படுவதை நான் விரும்ப மாட்டேன் - அது என் உணர்வுகளை பாதிக்கும் – அதே போல, அவர்களும் அதை விரும்புவதில்லை, அது அவர்களின் உணர்வுகளையும் பாதிக்கிறது.
  • மரியாதையுடன் ஒரு மனிதனை அக்கறையுடன் அணுகுதல்.

சுருக்கம்

கடினமான மனிதர்களுடன் கையாள, நிச்சயமாக, அவர்களைப் பார்க்கும் போதோ அல்லது அவர்களை பார்ப்பதற்கு முன்னரே வாய்ப்பு இருந்தால் முதலில் நாம் அமைதியாக இருக்க வேண்டும்.  அதன் பின்னர் நாம் அவர்களுடன் இருக்கலாம், நாம் அவர்களை மரியாதையுள்ள மனிதர்களாக நமக்கு இருப்பது போன்ற உணர்வுகளுடனே இருப்பவர்களாகக் கருதி அக்கறை அணுகுமுறையை வளர்க்கலாம். இது போன்ற ஒரு அணுகுமுறையை உருவாக்கும் போது இருக்கும் ஒரே ஒரு தடை அந்த மரியாதைக்குரிய நபருடைய வாழ்வின் யதார்த்தமான பெரிய சூழலில் இல்லாதது. நாம் நம்முடைய தவறான முன்னெடுப்புகளை வெளியேற்றி அவர்களை மேலும் யதார்த்தமானவர்களாகப் பார்த்தால் பின்னர், திறந்த மற்றும் அக்கறை நடத்தையுடன், அவர்களுடன் மேலும் வெற்றியுடன் நம்மால் கையாள முடியும்.

Top