பௌத்தத்தை பயில்வதால் என்ன பயன்?

பௌத்த கருத்தாக்கத்தில் தியானம் பற்றி பேசுவதென்பது, நாம் அரிதான குறிப்பிட்ட ஒன்றை பற்றிப் பேசுகிறோம். இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லா வகையான இடங்களிலும் அடிக்கடி கேட்கும் வார்த்தை “தியானம்”, ஏனெனில் இது அதற்கு ஒரு நற்பெயர் உள்ளது, மேலும் பலர் இதனை சோர்வை நீக்கும் மருந்தாகக் கருதுகின்றனர். எவ்வாறாயினும்; உண்மையில் தியானப்பயிற்சிக்கு செல்பவர்களில், பெரும்பாலானோருக்கு தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்ற புரிதல் இல்லை. அப்படியே புரிதல் இருந்தாலும் நாம் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்: ஆனால் அதன் பின் என்ன? இது சுவாசத்தில் கவனம் செலுத்தி கனிவான சிந்தனைகளைக் கொண்டிருப்பதற்கு மேலானதா?

சமஸ்கிருதத்தில் தியானம் என்ற சொல்லுக்கு எதையாவது உண்மையில் யதார்த்தமாக்குவது என்ற அர்த்தம் உள்ளது. திபெத்தியர்கள் இந்த வார்த்தைக்கு ஒரு குறிப்பிட்ட பழக்கத்தை கட்டமைப்பது என்று அர்த்தம் கொண்டுள்ளனர். நாம் ஒரு பழக்கத்தை கட்டமைக்கும் போது, நாம் அதனை நமக்குள் ஒரு அங்கமாக்குகிறோம், அதைத் தான் நாம் தியானத்திலும் செய்ய முயற்சிக்கிறோம். நாம் நமக்குள்ளேயே ஒரு மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறோம் அதுவே பலன். முதலில் நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்வி, நாம் ஏன் மாற்ற்ததை விரும்புகிறோம்? ஏனெனில் நாம் வாழும் வாழ்வில் நாம் மகிழ்ச்சியாக இல்லை, அல்லது நாம் விரும்பும் வகையில் வாழ்க்கை அமையவில்லை, அல்லது மற்றவர்களுடனோ அல்லது நம்முடைய பணியில் தொடர்பு இல்லாமல் இருப்பது. இந்தப் பட்டியல் இப்படியே நீண்டு கொண்டே போகும், ஆனால், நம்மில் பெரும்பாலானோர் கொண்டிருக்கும் நோக்கம் நம்முடைய வாழ்வை மேம்படுத்துதல்.

Top