பயம்: குழப்பமான உணர்வுகளை கையாளுதல்

08:57
வாழ்க்கையில் நேர்மறையான எதையும் அடைவதற்கான வலுவான தடைகளில் ஒன்று பயம். ஒரு குழப்பமான மனநிலையாக, இது விழிப்புணர்வின்மை அடிப்படையிலானது, குறிப்பாக பாதுகாப்பாக உணர்வது என்றால் என்ன என்பதைப் பற்றியது. எவ்வாறாயினும், பலவித அவசர மற்றும் தற்காலிக முறைகள் மூலம், நம்மை முடக்கிப்போடும் பயத்தின் பிடியில் இருந்து விடுவிக்க முடியும்.

பயத்தை கையாள்வதற்கான அவசர முறைகள்

திபெத்திய பௌத்தத்தில், பெண் புத்த உருவம் தாரா நம்மை பயத்தில் இருந்து பாதுகாக்கும் புத்தரின் அம்சத்தை குறிக்கிறது.  உண்மையில் தாரா என்பது உடல் மற்றும் சுவாசத்தின் காற்றாற்றலை குறிக்கிறது. தூய்மைப்படுத்தினால், அவள் செயல்படுவதற்கான திறனையும் நம்முடைய இலக்குகளை அடைவதையுமே பிரதிபலிக்கிறாள். பயத்தைக் கையாள்வதற்கான சுவாசம் மற்றும் நுட்பமான ஆற்றல்களுடன் பணிபுரியும் பல அவசர முறைகளை இந்தக் குறியீடு பரிந்துரைக்கிறது

தியானித்தல், போதனைகளைக் கேட்டல் அல்லது கற்றலுக்கு முன்னர் நாம் செய்யக்கூடிய முன் ஏற்பாடு பயிற்சிகளில் (முதல் நிலைகள்) இருந்தே அவசர முறைகள் பெறப்பட்டன.  நாம் மிகவும் பயப்படும்போது அல்லது பீதி அடையத் தொடங்கும் போது, இந்த நடைமுறைகள் தங்களுக்குள்ளேயே அவசர காலங்களில் நம்மை அமைதிப்படுத்த உதவுகின்றன. ஆழமான முறைகளைப் பயன்படுத்துவதற்கு முன் எடுக்க வேண்டிய முதல் படிகளாகவும் அவை செயல்படுகின்றன. அவற்றில் ஒன்றை மட்டும் நாம் பயன்படுத்தலாம் அல்லது பின்வரும் வரிசையில் ஐந்தையும் பயிற்சி செய்யலாம்:

  1. கண்களை மூடிக்கொண்டு சுவாசித்தலின் சுழற்சியை எண்ணுதல், அந்த சுழற்சிகளை உள் மற்றும் வெளி சுவாசித்தலாக எடுத்தல் மற்றும் மூச்சை உள்ளே இழுத்து வெளியிடும்போது, வயிற்றின் அடிப்பகுதி உள்ளே இழுக்கப்பட்டு பின்னர் சுவாசத்தை வெளியிடும் போது வயிற்றுப் பகுதி மேலே எழும்பும் அந்த உணர்வில் கவனம் செலுத்துதல். 
  2. கண்களை பாதி திறந்த நிலையில் சுவாசித்தலின் சுழற்சியை எண்ணுதல், தரையைப் பார்த்தபடி சற்றே தளர்வாக கவனம் செலுத்துதல், மூச்சை வெளியிட்டு, சற்றே இழுத்துப் பிடித்து, பின்னர் மூச்சை உள்ளே இழுக்கும் சுழற்சியாக எடுத்துக்கொள்ளுங்கள், மேலே சொன்ன அதே கவனத்துடன், அதன் பின்னர் நம்முடைய அடிப்பகுதி நாற்காலியை அல்லது தலையைத் தொடுகிறதா என்ற உணர்வின் அறிதலையும் சேர்த்தல். 
  3. நாம் எதை, ஏன் (அதிக அமைதி பெற) அடைய விரும்புகிறோம் என்பதன் உந்துதல் அல்லது இலக்கை மீண்டும் உறுதிப்படுத்தவும்.
  4. கேமராவின் லென்ஸ் போல மனமும் ஆற்றலும் கவனத்திற்கு வருகிறது என்று கற்பனை செய்து பாருங்கள்.
  5. சுவாசித்தலை எண்ணாமல், மூச்சுவிடும் போது அடிவயிறு எழும்பி மீண்டும் இறங்குவதில் கவனம் செலுத்தி உடலின் அனைத்து ஆற்றல்களும் இணக்கமாக பரவிச்செல்வதாக உணர்தல்.

பயம் என்றால் என்ன?

பயம் என்பது அறியப்பட்ட அல்லது அறியப்படாத ஒன்றைப் பற்றி உணரப்படும் உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான அசௌகரியம் ஆகும், அதைக் கட்டுப்படுத்தவோ, கையாளவோ அல்லது நாம் விரும்பும் முடிவைக் கொண்டுவரவோ நமக்கு எந்தத் திறனும் இல்லை என்று உணர்கிறோம். நாம் எதைப் பார்த்து பயப்படுகிறோமோ அதனை அகற்ற விரும்புகிறோம், இதனால் ஒரு வலுவான விரட்டல் உள்ளது. பயம் ஒரு பொதுவான கவலையாக இருந்தாலும், நாம் பயப்படும் ஒரு குறிப்பிட்ட பொருள் இல்லாமல், இன்னும் வரையறுக்கப்படாத "ஏதாவது" அகற்றப்பட வேண்டும் என்ற வலுவான விருப்பம் ஏற்படுகிறது.

பயம் என்பது வெறும் கோபம் அல்ல. ஆயினும் கூட, கோபத்தைப் போலவே, இது நாம் அஞ்சும் பொருளின் எதிர்மறை குணங்களின் விரிவாக்கத்தையும் "நான்" என்ற தலைக்கணத்தையும் ஏற்படுத்துகிறது. பயம் கோபத்தை வேறுபடுத்தும் (அங்கீகாரம்) மன காரணியை சேர்க்கிறது, அதை நம்மால் கட்டுப்படுத்தவோ அல்லது கையாளவோ முடியாது. அதன் பின்னர் நாம் பயப்படுவது எதனால்? மற்றும் வேறுபடுத்தும் விதத்தின் அடிப்படையில் நாம் கவனம் செலுத்துகிறோம். வேறுபடுத்தும் மற்றும் கவனம் செலுத்தும் அந்த வழி துல்லியமாகவோ அல்லது துல்லியம் இல்லாமலோ இருக்கலாம்.

அறியாமையால் வருகிற பயம்

பயம் எப்போதுமே யதார்த்தத்தின் சில உண்மையான அறியாமை (புறக்கணிப்பு, குழப்பம்) உடன் சேர்ந்து வருகிறது – ஒன்று அதனை அறியாமலோ அல்லது யதார்த்தத்திற்கு ஒத்துவராத விதத்தில் அதனை அறிந்து வைத்திருப்போம். சாத்தியமுள்ள ஆறு மாறுபாடுகளை நாம் கருத்தில் கொள்வோம். 

(1) சூழ்நிலையை கையாளவோ அல்லது கட்டுப்பாட்டில் வைக்கவோ நம்மால் முடியாது என்று நாம் பயந்தால், நம்முடைய பயமானது விஷயங்கள் எப்படி இருக்கின்றன என்ற காரணம் மற்றும் தாக்கத்தின் அறியாமையுடன் இருக்கலாம். நம்மைக் குறித்தும் நாம் அஞ்சுவது குறித்தும் கவனம் செலுத்துவதும் நம்மை பயமுறுத்தும் வழியின் கருத்தியல் பொருள்களானவை:  

  • "நான்" என்ற உறுதியான நிலைப்பாடு - ஒருவர் தனது சக்தியால் மட்டுமே, நம் குழந்தை காயமடையாமல் இருப்பது போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும்.
  • ஒரு "பொருளின்" இயல்புநிலை - தானாக இருக்கும் மற்றும் வேறு எதனாலும் பாதிக்கப்படாத ஒன்று, அதை நம் சொந்த முயற்சிகளால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும், ஆனால் சில தனிப்பட்ட போதாமையின் காரணமாக நம்மால் அவ்வாறு செய்ய முடியவில்லை.

இவையே சாத்தியமற்ற இருப்பு மற்றும் சாத்தியமற்ற காரண காரணிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2) நம்மால் சூழலைக் கையாள முடியாது என்று நாம் பயந்தால், அதனுடன் சேர்ந்திருக்கும் அறியாமையானது மன மற்றும் நிலையின்மையின் இயல்பாக இருக்கலாம். நம்முடைய உணர்ச்சிகளைக் கையாளவோ அல்லது நாம் நேசிக்கும் ஒருவரின் இழந்த சூழலையோ நம்மால் கையாள முடியாது என்று நாம் அஞ்சுகிறோம், நம்முடைய வலி மற்றும் சோக அனுபவங்கள் தோற்றங்களின் எழுச்சி மற்றும் அறிதல் மட்டுமே என்பதை நாம் அறியவில்லை. அவை நிலையற்றவை, பல் மருத்துவர் பற்களைத் துளைக்கும் வலியைப் போல கடந்து போகும். 

(3) ஒரு சூழலை கையாள முடியாது என்ற நமது பயமானது அதனை நாமே கையாள முடியாது என்ற பயமாக இருக்கலாம். இது தனியாக இருத்தல் மற்றும் தனிமையில் இருக்கும் பயமாகக் கூட இருக்கலாம்.  நிலைமையைத் தணிக்கக்கூடிய வேறு ஒருவரைக் கண்டுபிடிக்க முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். இங்கே கருத்துருவாகிய பொருள்களானவை

  • "நான்" என்ற உறுதியான நிலைப்பாடு - திறமையற்ற, தகுதியற்ற மற்றும் ஒருபோதும் கற்றுக் கொள்ளாதவர்.
  • உறுதியாக இருக்கும் "வேறொருவர்" - என்னை விட சிறந்தவர் மற்றும் என்னைக் காப்பாற்றக்கூடிய ஒருவர்.

மற்றவர்களும் நாமும் எப்படி இருக்கிறோம் என்பதை அறியாமலும், காரணம் மற்றும் விளைவு பற்றிய விழிப்புணர்வின்மையின் மற்றொரு வடிவம் இது. நமது கார் பழுதடைவது போன்றவற்றைக் கையாளும் அளவுக்குப் போதிய அறிவு இப்போது நம்மிடம் இல்லை என்பதும், அந்த அறிவை வேறு யாரேனும் பெற்றிருக்கலாம், நமக்கு உதவ முடியும். இருப்பினும், காரணம் மற்றும் விளைவின் செயல்பாட்டின் மூலம், நாம் கற்றுக்கொள்ள முடியாது என்று அர்த்தமல்ல.

(4) நாம் யாரையாவது பார்த்து பயந்தால், உதாரணமாக நம்முடைய முதலாளிகள், அவர்களின் வழக்கமான இயல்பு என்பதை நாம் அறிந்திருக்கவில்லை. நம்முடைய முதலாளிகளும் நம்மைப் போலவே உணர்வுகள் கொண்ட மனிதர்கள். அவர்களும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள், மகிழ்ச்சியின்றி இருக்க விரும்பவில்லை, நேசிக்கப்பட விரும்புகிறார்கள், அனைவராலும் விரும்பப்படாமல் இருக்க விரும்பவில்லை. அவர்களுக்கு அலுவலகத்திற்கு வெளியே வாழ்வு இருக்கிறது, இது அவர்களின் மனநிலையை பாதிக்கிறது. அந்தந்த நிலைகளில் கவனம் செலுத்தும் அதே வேளையில், நமது பணியாளர்களுடன் மனித அடிப்படையில் தொடர்பு கொள்ள முடிந்தால், நமக்கு பயம் குறையும்.

(5) அதே போன்று, பாம்புகள் அல்லது பூச்சிகளிடம் நமக்கு பயம் இருந்தால், நம்மைப் போலவே அவையும் உணர்வுள்ள உயிர்கள் என்பதை நாம் அறியவில்லை, அவைகளும் மகிழ்ச்சியை விரும்புகின்றன, மகிழ்ச்சியின்றி இருக்க விரும்பவில்லை. பௌத்த கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், ஒரு இனம் அல்லது மற்றொரு இனம் என்ற உள்ளார்ந்த அடையாளத்தைக் கொண்டிருக்காத ஒரு தனிப்பட்ட மனத் தொடர்ச்சியின் தற்போதைய வெளிப்பாடாக அவற்றை நாம் அறியாமல் இருக்கலாம். முந்தைய ஜென்மத்தில் அவர்கள் நம் தாய்மார்களாக கூட இருந்திருக்கலாம் என்பது நமக்குத் தெரியாது.

(6) தோல்வி அல்லது நோய்வாய்ப்படுவதைப் பற்றி நாம் பயப்படும்போது, வரையறுக்கப்பட்ட சம்சாரிய மனிதர்களாகிய நமது வழக்கமான இயல்புகளை நாம் அறியாமல் இருக்கிறோம். நாம் சரியானவர்கள் அல்ல, நிச்சயமாக நாம் தவறு செய்வோம், சில சமயங்களில் தோல்வியடைவோம் அல்லது நோய்வாய்ப்படுவோம். "சம்சாரியத்தில் இருந்து நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?" 

பாதுகாப்பாக உணர்தல்

ஒரு பௌத்த கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், பாதுகாப்பாக உணரத் தேவையில்லை: 

  • சர்வ வல்லமை என்பது சாத்தியமற்றது என்பதால், நம்மைப் பாதுகாக்கும் ஒரு சர்வ வல்லமையுள்ள மனிதனிடம் செல்வதை பாதுகாப்பானதாக உணர முடியாது:
  • சக்தி வாய்ந்த ஒரு உயிரினம் நமக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தாலும், அந்த உயிரை மகிழ்விக்க வேண்டும் அல்லது பாதுகாப்பு அல்லது உதவியைப் பெறுவதற்காக ஒரு படையல் அல்லது தியாகம் செய்ய வேண்டும்.
  • நமக்கு நாமே சர்வ வல்லமை படைத்தவராக மாறுதல்

அவ்வாறே நாமும் உணர்வதற்கு, பின்வரும் வரிசை நமக்குத் தேவை:  

  1. நாம் எதற்காகப் பயப்படுகிறோம் என்பதை அறிந்துகொள்வது மற்றும் அதன் அடிப்படையிலான குழப்பம் மற்றும் அறியாமையை அடையாளம் காணுதல்
  2. நாம் பயப்படுவதைக் கையாள்வதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றிய யதார்த்தமான யோசனையைப் பெறுதல், குறிப்பாக அடிப்படைக் குழப்பத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வது.
  3. நாம் பயப்படுவதைக் கையாள்வதற்கான நமது திறன்களை மதிப்பீடு செய்தல், இந்த தருணத்திலும் நீண்ட காலத்திலும், நம்மைக் குறைத்துக் கொள்ளாமல் அல்லது மிகைப்படுத்திக் கொள்ளாமல், நமது வளர்ச்சியின் தற்போதைய நிலையை ஏற்றுக்கொள்ளுதல்.
  4. நாம் இப்போது செய்யக்கூடியதைச் செயல்படுத்த - நாம் அதைச் செய்கிறோம் என்றால், சந்தோஷப்படுங்கள்; நாம் அதைச் செய்யவில்லை என்றால், நமது தற்போதைய திறன்களில் சிறந்ததைச் செய்யத் தீர்மானித்து, பின்னர் அதைச் செய்ய முயற்சிக்கவும்.
  5. இப்போது நம்மால் அதை முழுமையாகக் கையாள முடியாவிட்டால், அதை முழுமையாகக் கையாளும் அளவுக்கு எவ்வாறு வளர்ச்சியடைவது என்பதை அறிந்து கொள்வது
  6. வளர்ச்சியின் அந்தக் கட்டத்தை அடைவதற்கான நோக்கம் மற்றும் செயலாற்றுதல்
  7. நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று பாதுகாப்பாக உணர்தல்

மேற்கூறிய ஏழு படிகள் பௌத்தம் சொல்லும் "பாதுகாப்பான திசையை எடுத்தல்" (அடைக்கலம் பெறுதல்) என்று கூறுவதை விவரிக்கிறது. இது ஒரு செயலற்ற நிலை அல்ல, ஆனால் நம் வாழ்வில் ஒரு பாதுகாப்பான திசையை வைப்பதில் செயலில் உள்ளது - செயலாற்றும் திசையின், ஒரு யதார்த்தமான முறையில், நம் அச்சங்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது. இதன் விளைவாக, நாம் பாதுகாப்பாக உணர்கிறோம், ஏனென்றால் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் சரியான திசையில் செல்கிறோம் என்பதை நாம் அறிவோம், அது இறுதியில் எல்லா பிரச்சனைகள் மற்றும் சிரமங்களிலிருந்து விடுபட நம்மைத் தூண்டுகிறது.

பயமுறுத்தும் சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய யதார்த்தமான பார்வை

நாம் நினைவில் கொள்ள வேண்டியவை:

  • நம் அன்புக்குரியவர்களுக்கு அல்லது நமக்கு என்ன நடந்தாலும் அது தனிப்பட்ட கர்ம சக்திகள் மற்றும் வரலாற்று, சமூக மற்றும் பொருளாதார சக்திகளின் ஒரு பெரிய வலைப்பின்னலின் பலனாகும். விபத்துகள் மற்றும் பிற விரும்பத்தகாத விஷயங்கள் நடக்கும், நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும், எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாலும், நம் அன்புக்குரியவர்களை அவர்களிடமிருந்து பாதுகாக்க முடியாது. நாம் செய்யக்கூடியது நல்ல அறிவுரைகளை வழங்க முயற்சிப்பது மற்றும் அவர்கள் நன்றாக இருக்க வாழ்த்துவதாகும்.
  • விபத்துக்கள் மற்றும் பயத்தை போக்க, கருத்தியல் அல்லாத அறிவாற்றலுக்கான வெற்றிடத்தை நாம் பெற வேண்டும். எவ்வாறாயினும், வெற்றிடத்தில் முழுவதுமாக உள்வாங்கப்பட்டிருப்பது, நம் தலையை தரையில் உள்ள துளையில் வைப்பதைப் போன்றதல்ல. இது பயத்திலிருந்து ஓடுவது அல்ல, ஆனால் நம் கர்மாவை விரும்பத்தகாத விஷயங்களாகக் கனிய வைக்கும் மற்றும் நமக்கு பயத்தை ஏற்படுத்தும் அறியாமை மற்றும் குழப்பத்தை நீக்குவதற்கான ஒரு முறையாகும்.
  • நமது கர்மாவில் இருந்து நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக கருத்தியல் அல்லாத அறிவாற்றலுடன் செயலாற்றுவதில், சம்சாரியத்திலிருந்து (அர்ஹதம்) விடுதலையின் நிலை வரை நாம் இன்னும் விபத்துகளையும் பயத்தையும் அனுபவிப்போம். ஏனென்றால், ஏற்ற இறக்கம் கொண்டதுதான் சம்சாரியம். முன்னேற்றம் அவ்வளவு எளிதானதல்ல; சில நேரங்களில் விஷயங்கள் நன்றாக நடக்கும் மற்றும் சில நேரங்களில் அப்படி நடக்காது.
  • அர்ஹதரைப் போல நாம் ஒரு முறை விடுதலையை அடைந்தால், நடக்க வேண்டாம் என்று நாம் விரும்பும் விஷயங்கள் மற்றும் விபத்துகளை நாம் இன்னமும் அனுபவிப்போம். எப்படி இருந்தாலும், நாம் வலியோ துன்பமோ இல்லாமல் அவற்றை அனுபவிப்போம், ஏனென்றால் எல்லா குழப்பமான உணர்ச்சிகள் மற்றும் மனப்பான்மைகளில் இருந்தும், அச்சமின்றி நாம் சுதந்திரமாக இருக்கிறோம். அர்ஹத நிலையில் மட்டுமே, நம் எல்லா அச்சங்களையும் ஆழமான முறையில் முழுமையாகக் கையாள முடியும்.
    • நாம் ஞானம் அடையும் போது மட்டுமே விபத்துகள் அல்லது நடக்க விரும்பாத எதையும் நாம் அனுபவிக்க மாட்டோம். பிரகடனப்படுத்துவதில் புத்தர் மட்டுமே அச்சமில்லாதவர்:
    • அனைத்து நல்ல குணங்கள் மற்றும் திறமைகள் பற்றிய அவர்களது சொந்த உணர்தல்
    • விடுதலை மற்றும் ஞானமடைதலைத் தடுக்கும் அனைத்து தடுப்புகளையும் சுயமாக நிறுத்துதல் 
    • விடுதலை மற்றும் ஞானம் அடைய தங்களைத் தாங்களே இருளில் இருந்து அகற்றிக் கொள்ள வேண்டும்

பயத்தை கையாள்வதற்கான வழக்கமான முறைகள்

  1. மேலே குறிப்பிட்டுள்ள ஏழு நிலைகள் மூலம், வாழ்க்கை பாதுகாப்பான திசையில் செல்வதை மீண்டும் உறுதிப்படுத்தவும்.
  2. புற்றுநோய்க்கான சோதனை போன்ற ஒரு பயமுறுத்தும் சூழ்நிலையை எதிர்கொள்ளும் போது, மிக மோசமான காட்சியை கற்பனை செய்து பாருங்கள், அப்போது என்ன நடக்கும், அதை எவ்வாறு கையாள்வது என்று கற்பனை செய்து பாருங்கள். இது அறியாத பயத்தைப் போக்க உதவுகிறது.
  3. விமானத்தைப் பிடிப்பதற்காக சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைவது போன்ற ஒரு காரியத்தை மேற்கொள்வதற்கு முன், பல தீர்வுகளைத் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் நம்முடைய இலக்கை அடைவதற்கு ஒரு திட்டம் கைகொடுக்காவிட்டாலும் அடுத்து என்ன செய்வது என்ற பயத்தில் இருக்க மாட்டோம். 
  4. குரு சாந்திதேவா போதித்ததைப் போல, ஒரு பயமுறுத்தும் சூழல் இருந்தால், அதனை சரி செய்ய நம்மால் ஏதேனும் செய்ய முடியும் என்றால், பின்னர் எதற்கு கவலை, அதனைச் செய்யுங்கள். அப்படி செய்வதற்கு எந்த வழியுமே இல்லாவிட்டால், பிறகு ஏன் கவலைப்படுகிறீர்கள். அதுவும் உதவாது. 
  5. விடுதலை அடையும் வழி முழுவதும் பயம் மற்றும் மகிழ்ச்சியின்மையை அனுபவிப்பதால், நம் மனதைக் கடலைப் போல ஆழமாகவும் விசாலமாகவும் வைத்து, பயம் அல்லது மகிழ்ச்சியின்மை எழும்போது, கடலில் ஒரு சுழலைப் போல அது கடந்து செல்ல வேண்டும். சுழல் பெருங்கடலின் அமைதி மற்றும் ஆழத்தைத் தொந்தரவு செய்யாது.
  6. நமது ஆக்கபூர்வமான செயல்களில் இருந்து போதுமான நேர்மறை கர்ம சக்தியை (தகுதி) கட்டமைத்திருந்தால், எதிர்வரும் ஜென்மங்களில் ஒரு விலைமதிப்பற்ற மனித உடலுடன் தொடர்வதில் நம்பிக்கையுடன் இருக்க முடியும். பயத்திலிருந்து சிறந்த பாதுகாப்பு நமது சொந்த நேர்மறை கர்மாவாகும், இருப்பினும் சம்சாரித்தின் இயல்பானது ஏற்ற இறக்கத்துடன் செல்வது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
  7. ஒரு பயமுறுத்தும் சூழ்நிலையில், தர்ம பாதுகாவலர் அல்லது தாரா அல்லது மருத்துவ புத்தர் போன்ற புத்தர் உருவத்தின் உதவியைக் கோரும் ஒரு பழக்கத்தை நாமே நியமிக்கலாம் அல்லது செய்யலாம். இத்தகைய உருவங்கள் நம்மைக் காப்பாற்றும் சர்வ வல்லமை படைத்தவர்கள் அல்ல. அவர்களின் அறிவொளி தரும் செல்வாக்கினை நாம் கோருகிறோம் மற்றும் திறந்த மனதுடன் இருக்கிறோம், இதனால் நாம் முன்பு செய்த ஆக்கபூர்வமான செயல்களில் இருந்து கர்ம சக்திகளை கனிய வைக்கும் சூழ்நிலையாகவும் இது செயல்படலாம். மிகவும் பாதுகாப்பான விளைவு என்னவென்றால், அவர்களின் ஞான செல்வாக்கு, நாம் முன்பு செய்த அழிவுச் செயல்களின் கர்ம சக்திகள் அற்பமான அசௌகரியங்களுக்கு முதிர்ச்சியடையும் ஒரு சூழ்நிலையாக செயல்படுகிறது, இல்லையெனில் அது வெற்றியைத் தடுக்கும் கடுமையான தடைகளாக கனியக்கூடும். எனவே, சிரமங்களைக் கண்டு பயப்படுவதற்குப் பதிலாக, எதிர்மறையான கர்ம சக்திகளாக "எரித்து" அவற்றை வரவேற்கிறோம்.
  8. நம்முடை புத்த-இயல்புகளை மறு உறுதிப்படுத்துதல். கடினமான மற்றும் பயமுறுத்தும் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வதற்கு (கண்ணாடி போன்ற ஆழமான விழிப்புணர்வு), வடிவங்களை அடையாளம் காண (ஆழமான விழிப்புணர்வை சமன் செய்தல்), சூழ்நிலையின் தனித்துவத்தைப் பாராட்டுவதற்கு (ஆழமான விழிப்புணர்வைத் தனிப்படுத்துதல்) மற்றும் எப்படி செயல்படுவது என்பதை அறிவது (இதில் நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்வதும் அடங்கும்) (ஆழ்ந்த விழிப்புணர்வை நிறைவேற்றுதல்) என்ற ஆழமான விழிப்புணர்வின் அடிப்படை நிலைகளை நாம் கொண்டிருக்கிறோம். எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிதல். உண்மையில் செயல்படுவதற்கு அடிப்படையான ஆற்றல் நிலையையும் நாம் கொண்டிருக்கிறோம்.
  9. புத்தர்-இயல்பைக் கொண்டிருப்பது, நமக்குள் முழுமையான அனைத்து நல்ல குணங்களுக்கும் அடிப்படையைக் கொண்டிருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தவும். மேற்கத்திய உளவியல் அடிப்படையில், இந்த குணங்கள் நினைவு உள்ளதாகவோ அல்லது சுயநினைவு இல்லாததாகவோ இருக்கலாம் (நாம் அவற்றை நினைவில் வைத்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம், மேலும் அவை வெவ்வேறு அளவுகளில் உருவாகலாம்). பெரும்பாலும், நாம் உணர்வற்ற குணங்களை "நிழலாக" காட்டுகிறோம். ஏனெனில் சுயநினைவு இல்லாமை என்பது தெரியாதது என்பதால், அதை அறியாமல் இருப்பதன் பதற்றம் தெரியாத பயமாக வெளிப்படுகிறது, அதுவே நமது அறியப்படாத சுயநினைவில்லாத குணங்கள் பற்றிய பயம். எனவே, நாம் நமது நினைவுள்ள அறிவார்ந்த பக்கத்துடன் அடையாளம் காணலாம் மற்றும் நமது அறியப்படாத, உணர்வற்ற, உணர்ச்சி உணர்வு பக்கத்தை புறக்கணிக்கலாம் அல்லது மறுக்கலாம். நாம் உணர்ச்சி பக்கத்தை ஒரு நிழலாகக் காட்டலாம் மற்றும் மிகவும் உணர்ச்சிவசப்படும் மற்றவர்களைப் பார்த்து பயப்படலாம். நம்முடைய சொந்த உணர்ச்சிப் பக்கத்தைப் பற்றி நாம் பயப்படலாம் மற்றும் நம் உணர்வுகளுடன் தொடர்பில்லாததைப் பற்றி கவலைப்படலாம்.
  10. எனவே, இரு தரப்பும் நமக்குள் முழுமையானவை, நமது புத்தர் இயல்புகளின் அம்சங்களாக நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். தாந்திரீக காட்சிப்படுத்தல் போல, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தழுவிக்கொள்வதை நாம் கற்பனை செய்யலாம், மேலும் நாம் அந்த ஜோடியின் ஒரு உறுப்பினர் மட்டுமல்ல, நாமே முழுமையான ஜோடி என்று உணரலாம்.
  11.  நமது புத்தர் இயல்புகளின் மற்றொரு அம்சத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும், அதாவது மனதின் இயல்பு இயற்கையாகவே எல்லா அச்சங்களிலிருந்தும் விடுபட்டது, எனவே பயத்தை அனுபவிப்பது ஒரு விரைவான மேலோட்டமான நிகழ்வு.
  12. புத்தர்-இயல்பின் மற்றொரு அம்சத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும், அதாவது பயமுறுத்தும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் தைரியத்தைப் பெற மற்றவர்களால் நாம் தூண்டப்படலாம்.

சுருக்கம்

நாம் பயத்தில் மூழ்கும்போது, அதைச் சமாளிப்பதற்கான இந்த முறைகளை நாம் நினைவில் வைத்துக் கொண்டால், பயமாகத் தோன்றிய எந்தச் சூழ்நிலையையும் நாம் அமைதியாகவும் யதார்த்தமாகவும் சமாளிக்க முடியும்.

Top